ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஏப்ரல், 2018

643. காவிரி !

காவிரி !

நம் அன்னை !
நம் பாரதத்தின் சொத்து !

காவிரியின் மடியில்,
தமிழர்களும், கன்னடர்களும்
என்றுமே குழந்தைகள் !

மூத்த பிள்ளைக்கும்,
இளைய பிள்ளைக்கும்,
தாய் பேதம் பார்ப்பதில்லை !

காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !
அரசியல் செய்வதில்லை !

காவிரியை பிரச்சனையாய்
பார்ப்பவர்களாலேயே,
காவிரி மஹிமை
புரிவதில்லை !

காவிரியை அன்னையாய்
பார்ப்பவர்களால்
பிரச்சனைகள்
வருவதில்லை !

காவிரியாலேயே
தமிழகமும்,
கர்நாடகமும்
வாழ்கிறது !

காவிரியே...
தமிழக,
கர்நாடக
விவசாயிகளுக்கு
என்றுமே
நன்மை செய்வாள் !

காவிரி...
கருணையின் உரு !

காவிரி...
தெய்வீகத்தின் உரு !

காவிரி...
விளைச்சளின் கரு !

நாம் பிரார்த்திப்போம் !
காவிரியால்
தமிழகமும்
கர்நாடகமும்...
இன்னும் அன்பைப்
பறிமாற....

காவிரியால்
ஒற்றுமையே வளரும்...
காவிரியால்
நாட்டில் குழப்பத்தை
விளைவிப்பவரிடம்
இருந்து தேசத்தை
நாம் காப்போம் !

காவிரியில்...
தேவையான தண்ணீர்
எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...

காவிரி....
இனி எல்லோருக்கும்
அன்பை,
அழகை,
விளைச்சலை,
பாசத்தை,
நிம்மதியை,
ஆனந்தத்தையே...
தர நாம் பிரார்த்திப்போம்...

என்றோ ஆரம்பித்த,
காவிரி விவகாரம்...
நம் தலைமுறையோடு
நிரந்தரமாக முடியட்டும்...

எதிர்காலம்....
காவிரியின் கரையில்,
அமிருதமான தண்ணீரில்,
நிம்மதியாய்
வாழட்டும்....

இந்தக் காவிரிக் கவிதை...
இத்தனைக்கும்
நடுவில்,
அனைவரையும்,
வாழவைக்கத்துடித்து,
ஜீவ நதியாய்...
ஓடிக்கொண்டிருக்கும்
காவிரிக்கு
சமர்ப்பணம்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP