ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 நவம்பர், 2018

645. மணவாள மாமுனிகள்

👣👏🏻🙌🏼💫🕉🔥

*மணவாள மாமுனி திருநக்ஷத்திரம் !*

எங்கள் மாமுனியே...
கலி கண்ட மாமுனியே...
எம் கலி தீர்க்க வந்த மாமுனியே...

சாதாரண ஜனங்களும் எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்துய்ய...
*சாதாரண வருஷத்தில்* அவதரித்த மாமுனியே...

ஜீவர்களின் சம்சார ஐயத்தையும்,
ஆத்ம பசியையும் போக்க
*ஐப்பசியில்* வந்துதித்த மாமுனியே...

24 தத்துவங்களையும்,
25வதான ஆத்மாவையும்,
உணர்த்தி
26வதான பரமாத்மாவை காட்டித்தர
ஐப்பசி *26ம் நாள்* அவதரித்த மாமுனியே !

வளர்பிறையாய் பக்தி
ஞான வைராக்கியம் வளர
திவ்யப்ரபந்தத்தை அனுதினமும் சொல்லித்தர
*வளர்பிறையில்* வாராது வந்த மாமுனியே !

சதுர்வித புருஷார்த்தமான,
அறம் பொருள் இன்பம் வீடு,
சதுர் வர்ணத்தவரும் அடைய,
*சதுர்த்தியில்* ஜகத்தை
ஆள வந்த மாமுனியே !

லக்ஷ்மி நாதன் தொடக்கமான,
நாதமுனி யாமுனாசார்யாரை நடுவில் கொண்ட,
யதிராஜன் வழி வந்த
குருபரம்பரை விளங்க,
குருவாரமான *வியாழனன்று* குலமணியாய் வந்த மாமுனியே !

ஆதிமூலமான நாராயணனை,
அன்போடு அடை நெஞ்சே,
என்று அக்கறையோடு சொல்ல,
*மூல நட்சத்திரத்தில்* முத்தாய் வந்த எங்கள் மாமுனியே !

சைலேச தயா பாத்திரமென
அரங்கனும் பிள்ளையாய்
வந்து ஸ்தோத்திரம் செய்த
ஆசார்ய குல சிகாமணியான
*மணவாள மாமுனியே இன்னுமோர் நூற்றாண்டு இரும்...*

©குருஜீ கோபாலவல்லிதாசர்
ஐப்பசி மூலம்...
11/11/2018, ஞாயிறு..

💫🕉🙌🏼👣👏🏻🔥

Read more...

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

644. தமிழ் புத்தாண்டு !

அகத்தியர் சொல்படி
வழிபட்டு வாழும்
உன்னத தமிழருக்கு,
சிறந்த சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

தொல்காப்பியரின்
தொன்மையைப் பேசும்,
தொய்வில்லா தமிழருக்கு,
தெளிவான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ஆழ்வார்கள் சொன்ன
பாசுரங்கள் சேவிக்கும்
அற்புத தமிழருக்கு,
அருமையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நாயன்மார்கள் நவின்ற
பதிகங்கள் பாடும்
நன்மைமிகு தமிழருக்கு
நல்லதான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

கம்பனின் ராமாயணத்தில்
களித்துத் திளைக்கும்
கவித்துவ தமிழருக்கு
காதலோடு சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ஔவையின் ஆத்திச்சூடியை
ஓயாமல் விரும்பும்
ஒப்புயர்வற்ற தமிழருக்கு
ஒற்றுமை தரும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வள்ளுவரின் திருக்குறளை
வாய் நிறையப் பேசும்
வாட்டமில்லா தமிழருக்கு
வளமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மலையும் மலைசார்ந்த
குறிஞ்சி நிலத்தின்
குதூகலமான தமிழருக்கு
குறைவில்லா சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

காடும் காடுசார்ந்த
முல்லை நிலப்பகுதியின்
முதன்மையான தமிழருக்கு
முத்தான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வயலும் வயல்சார்ந்த
மருத நிலப்பகுதியின்
மாண்புமிகு தமிழருக்கு
மரியாதையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கடலும் கடல்சார்ந்த
நெய்தல் நிலப்பகுதியின்
நேர்மையான தமிழருக்கு
நியாயமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

மணலும் மணல் சார்ந்த
பாலை நிலப்பகுதியின்
பாசமுள்ள தமிழருக்கு
பாங்கான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அகநானூறு புறநானூறு
அழகாய் தந்தவரின் வழிவந்த
அன்புமிக்க தமிழருக்கு
அசத்தலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இயல் தமிழ்,இசைத் தமிழ்,
நாடகத் தமிழ் என
முத்தமிழ் தமிழருக்கு
முதலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சேர சோழ பாண்டியர்
கட்டிய கோவில்களையும்
தெய்வங்களையும் மதிக்கும்
பக்திமிகு தமிழருக்கு
பாரம்பரிய சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்,
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும்,
தெளிவாய் சொன்ன
தேன் போன்ற தமிழருக்கு,
தித்திக்கும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வந்தாரை வாழவைக்கும்,
நொந்தாருக்கு ஆறுதல் தரும்,
நாத்திகம் பேசாத,
ஆத்திக தமிழருக்கு
ஆசீர்வாத சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வாழிய செந்தமிழ்,
வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தேமாதரம் என்னும்
தேசப்பற்றுள்ள தமிழருக்கு
தீர்கமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

சனி, 7 ஏப்ரல், 2018

643. காவிரி !

காவிரி !

நம் அன்னை !
நம் பாரதத்தின் சொத்து !

காவிரியின் மடியில்,
தமிழர்களும், கன்னடர்களும்
என்றுமே குழந்தைகள் !

மூத்த பிள்ளைக்கும்,
இளைய பிள்ளைக்கும்,
தாய் பேதம் பார்ப்பதில்லை !

காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !
அரசியல் செய்வதில்லை !

காவிரியை பிரச்சனையாய்
பார்ப்பவர்களாலேயே,
காவிரி மஹிமை
புரிவதில்லை !

காவிரியை அன்னையாய்
பார்ப்பவர்களால்
பிரச்சனைகள்
வருவதில்லை !

காவிரியாலேயே
தமிழகமும்,
கர்நாடகமும்
வாழ்கிறது !

காவிரியே...
தமிழக,
கர்நாடக
விவசாயிகளுக்கு
என்றுமே
நன்மை செய்வாள் !

காவிரி...
கருணையின் உரு !

காவிரி...
தெய்வீகத்தின் உரு !

காவிரி...
விளைச்சளின் கரு !

நாம் பிரார்த்திப்போம் !
காவிரியால்
தமிழகமும்
கர்நாடகமும்...
இன்னும் அன்பைப்
பறிமாற....

காவிரியால்
ஒற்றுமையே வளரும்...
காவிரியால்
நாட்டில் குழப்பத்தை
விளைவிப்பவரிடம்
இருந்து தேசத்தை
நாம் காப்போம் !

காவிரியில்...
தேவையான தண்ணீர்
எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...

காவிரி....
இனி எல்லோருக்கும்
அன்பை,
அழகை,
விளைச்சலை,
பாசத்தை,
நிம்மதியை,
ஆனந்தத்தையே...
தர நாம் பிரார்த்திப்போம்...

என்றோ ஆரம்பித்த,
காவிரி விவகாரம்...
நம் தலைமுறையோடு
நிரந்தரமாக முடியட்டும்...

எதிர்காலம்....
காவிரியின் கரையில்,
அமிருதமான தண்ணீரில்,
நிம்மதியாய்
வாழட்டும்....

இந்தக் காவிரிக் கவிதை...
இத்தனைக்கும்
நடுவில்,
அனைவரையும்,
வாழவைக்கத்துடித்து,
ஜீவ நதியாய்...
ஓடிக்கொண்டிருக்கும்
காவிரிக்கு
சமர்ப்பணம்...

Read more...

வெள்ளி, 16 மார்ச், 2018

642. புதியதோர் வாழ்க்கை !

உன் வாழ்க்கை
உன்னை எதற்காகவும்
வெறுக்கவில்லை !

உன் வாழ்க்கை
உன்னை எதற்காகவும்
ஒதுக்கவில்லை !

கை நழுவிய வாய்ப்பில்
வாழ்க்கை முடியவில்லை...
அடுத்த வாய்ப்பை தேடுபவர்க்கு
வாழ்க்கை
ஆயிரம் வாய்ப்புகள் தரும்....

தொலைத்த நேரத்தில்
வாழ்க்கை முடியவில்லை...
இருக்கும் நேரத்தை உபயோகப்படுத்துவருக்கு
வாழ்க்கை
ஆயிரம் வரங்கள் தரும்...

செய்த தவறுகளில்
வாழ்க்கை முடியவில்லை...
தவறை திருத்திக்கொண்டு,
புதிதாய் முயல்பவருக்கு
வாழ்க்கை
சிவப்புக் கம்பளம் விரிக்கும்...

உன் வாழ்க்கையை
நீ தானே வாழவேண்டும் !

உன் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியும்
உனக்காகவே...

உன் வாக்கையின்
ஒவ்வொரு நிகழ்வும்,
உனக்காக
உன் தெய்வம்
பிரத்யேகமாக
செதுக்குகிறது....

சிலிர்த்து வா !!!
எழுந்து வா !!!
வீறுகொண்டு வா !!!

புதியதோர்
வாழ்க்கை
உன்னை
அன்புடன்
வரவேற்கிறது....

Read more...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

641. மரணம்

👏🏻🕉🙌🏽🙏🏼🤲🏽🤝🏼💞

மரணம் !

இந்த வாரம்...
#மரண வாரம்...
பிணங்கள் வாரம்...

பயப்படாதீர்கள்..
#உலக #இயற்கை இது...
நாளும் நடக்கும் #காட்சி இது...

#ஊடகங்கள் பேசினாலும்,
#பேசவிட்டாலும்...
சமூக #வலைத்தளங்கள்...
#சொன்னாலும்,
சொல்லாவிட்டாலும்...
#நிரந்தர #விஷயம் இதுவே...

ஒருவர் #பெண்... 
#திரைத்துறை...
புகழின் உச்சியை அடைந்தவர்...
திருமணத்திற்கு சென்றார்...
வெளிநாட்டில் 
மரணம்...

ஒருவர் #ஆண்...
#ஆதிவாசி...
இயற்கையோடு வாழ்ந்தவர்...
இயற்கையான #பசிக்கு,
உணவு திருடப்போய்
அடிக்கப்பட்டு #இறந்தார்...
உள்நாட்டில் மரணம்...

இரண்டுமே #வெவ்வேறு...
ஆயினும் ஒன்று...

#வயது...
#அந்தஸ்து...
படிப்பு...
#சூழ்நிலை...
இறந்த #முறை...
உலகின் பார்வை...
எல்லாம் வெவ்வேறு...

மரணமடைந்தனர்..
இது இருவருக்கும் ஒன்றே...

இவையில்லாமல்...
செங்கல்பட்டு 
கருணை(?) இல்ல ரகசிய
புரியாத புதிர் மரணங்கள்...

இந்த மரணங்களைத் தாண்டியும்
சில மரணங்கள்...

#தாய்நாட்டிற்காக தன்னுயிர் ஈந்த வீரர்களின் #தியாக #மரணம்...

இவர்களில்லாமல்,
#சிரியாவில் தாக்குதலில்
#பிஞ்சுக்குழந்தைகளின்
கொடூர மரணங்கள்...

இவையோடு நிற்கவில்லை...
பட்டியல்...

நமக்குத் தெரிந்தவருக்கு
வேண்டியவர்களின்,
நாம் பழகிய சிலரின்
மரணங்கள்...

நாம் அறியா...
நமக்குத் தெரியா...
பல பல மரணங்கள்...

இவையெல்லாம்...
புதியதா ?!?!?

இல்லையில்லை...
மரணத்தைப் போல் பழையதுமில்லை...
என்று எங்கோ
கேட்ட படித்த ஞாபகம்...

இந்த மரணங்கள்...
போதையால் ஒன்று...
பசியால் ஒன்று...
நாட்டிற்காக பல...
தாக்குதலால் பல...
காரணமறியாமல் பல...
முதுமையால் பல...
நோயினால் பல...
கொடுமையால் பல...

ஏதோ ஒரு காரணம்...
ஆனால் நிதர்சனம் ஒன்று...
மரணம் நிச்சயம்...
ஒரு நாள்...எப்படியும்...

ஆழ்வார்களும்,
நாயன்மார்களும்,
சொன்னதும் இதுவே...

இது தத்துவமல்ல...
யதார்த்தத்தின் உண்மை முகம்...

இந்த மரணத்தின் வரிசையில்
நாமும் நிற்கிறோம்...
நமக்கு பிடித்தவரும்,
நாம் வெறுப்பவரும்,
நம்மோடு நிற்கின்றனர்...
இந்த ஒரு கடைசி
பயணத்திற்காக...

#நமக்கும் #உண்டு இது...

செத்த பிணங்களைப் பார்த்து...
சாகப்போகும் பிணங்களின்...
அழுகை...ஒப்பாரி...
சாடல்...புலம்பல்...

எதுவும் நிறுத்தப்போவதில்லை...
இந்த மரணத்தை...

கோபாலன் சொல்ல கோபாலவல்லி எழுதுகிறான்...

அதனால்...
அதுவரை...
#அன்பைத் தருவோம்...
அன்பைப் #பெறுவோம்...
அன்பை வெளிப்படுத்துவோம்...
அன்பைப் #பகிர்வோம்...

நம் உடலுக்கு மரணம் உண்டு...
நமக்கு மரணமில்லை...
நம் அன்பிற்கும் எல்லையில்லை...

உடலிலிருந்து உயிர் பிரிதலே மரணம்...
பிரிந்த உயிர்கள் நிம்மதியாய் இறைவன் திருவடியில் இருக்க,
நாம் ப்ரார்த்திப்போம்...

தங்கள் அன்பிற்குறியவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு,
மனோபலமும்,
நம்பிக்கையும், தர
எல்லாம் வல்ல
இறைவனைப்
ப்ரார்த்திப்போம்...

நம்மால் முடிந்த
ஆறுதலையும் தருவோம்...

அன்பு...
உயிர்...
வாழ்வு...

உள்ளவரை அன்போடு வாழ்வோம்...
உடலில் உயிர் உள்ளவரை...
நம் உடலில் உயிர் உள்ளவரை...

இதுவே மானுட தர்மம்..
அன்பின் வழியது உயிர்நிலை...

குருஜீ கோபாலவல்லிதாசர்

27/2/2018...

நள்ளிரவு12.40...

🙏🏼🙌🏽🕉👏🏻🤲🏽🤝🏼💞

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP