633. ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி
✍🏼🍃 *ஆனந்தவேதம்*🌱🖋
*_ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி !_*
புரட்டாசி திருவோணம், ஏற்றம் பெற்ற நாளோ இன்று !!!
மலையப்பன் திருமணி, புவியில்
வந்துதித்த நாளோ இன்று !!!
யதிராஜன் ராமானுஜர், மீண்டும்
வையத்தில் வந்த நாளோ இன்று !!!
விளக்கொளி பெருமாள் ஒளி
ஜொலித்த நாளோ இன்று !!!
வரதராஜனின் அருள், உலகிற்கு
வரமாய் வந்த நாளோ இன்று !!!
அரங்கனின் பாதுகைகளுக்கு
ஆசி கிடைத்த நாளோ இன்று !!!
ஹயக்ரீவனின் தாபமெல்லாம்
தீர்ந்த நாளோ இன்று !!!
கருடாழ்வாரின் மகத்துவம் பாரில்
பரிமளித்த நாளோ இன்று !!!
தேவநாதனின் தேவையெல்லாம்
பூர்த்தியான நாளோ இன்று !!!
ஆழ்வார்களும் ஆசார்யர்களும்,
ஆனந்தித்த நாளோ இன்று !!!
சம்ஸ்க்ருதமும், தமிழும்
குதூகலித்த நாளோ இன்று !!!
பெருந்தேவியின் பாக்கியம்
அவதரித்த நாளோ இன்று !!!
நம்பெருமாளின் நம்பிக்கை,
விருத்தியான நாளோ இன்று !!!
நரசிம்மனின் ஆனந்தம்
எல்லை கடந்த நாளோ இன்று !!!
பக்தி ஞான வைராக்கியம்,
வாழ்வு பெற்ற நாளோ இன்று !!!
பூமாதா பூரணமாய் புளகாங்கிதம்
பெற்ற நாளோ இன்று !!!
சம்சாரிகளுக்கெல்லாம் மோக்ஷம்
தீர்மானமான நாளோ இன்று !!!
நம் கொங்கில்பிராட்டி சூசகமாய்
சொன்ன நாளோ இன்று !!!
நமக்காக நிகமாந்த மஹாதேசிகன்
அவதரித்த நாளோ இன்று !!!
வைகுந்த நீள் வாசல் அடையா
நெடுங்கதவாய் ஆன நாளோ இன்று !!!
விசிஷ்டாத்வைதம் வீறு பெற்று
பேறு அடைந்த நாளோ இன்று !!!
தூப்புல் அக்ரஹாரம் குலமணியை
அடைந்த நாளோ இன்று !!!
நீசனான அடியேனும் கடைத்தேற,
ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி வந்த நாளோ இன்று !!!
இன்றே தான் !
பல் கலையோருக்கும்,
பொதுவாய் வேதாந்தமே,
தேசிகராய் வந்த நாளே இன்று !!!
©குருஜீ கோபாலவல்லிதாசர்
✍🏼🌱 *ஆனந்தவேதம்* 🍃🖋
0 கருத்துகள்:
கருத்துரையிடுக