ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கண்ணா ! தூது செல் !

ராதே...
வருவாயா...
உன் தாசி
கெஞ்சுகிறேன் !

ராதே...
தருவாயா...
உன் தாசி
காத்திருக்கிறேன் !

ராதே...
அருள்வாயா...
உன் தாசி
யாசிக்கிறேன் !

ராதே...
உன் தாசியின்
இதயத்தை
உனக்குப் பிடித்த
நிதிவனமாய்
மாற்றிவிடு !

ராதே...
உன் தாசியின்
மனதை
நீயும் கண்ணனும்
விளையாடும்
மெத்தையாய்
மாற்றிவிடு !

ராதே...
உனக்கும்,
உன் கண்ணனுக்கும்,
அந்தரங்க
கைங்கரியம்
செய்ய உன் தாசிக்கு
வாய்ப்பு கொடு !

ராதே...
தகுதியில்லாத
உன் தாசியை
உன் திருவடியில்
என்றுமே
வைத்துக்கொள் !

க்ருஷ்ணா !
உன்னிடம்
கெஞ்சுகிறேன் !
எனக்காக
ராதிகாவிடம்
தூது செல் !

என் மனதை
உன் ராணியிடம்
சொல் !

என் தேவையை
உன் அழகியிடம்
சொல் !

என் தாபத்தை
உன் செல்லத்திடம்
சொல் !

என் அவசரத்தை
உன் தேவதையிடம்
சொல் !

காத்திருக்கிறேன்
கண்ணா !
உன் காதலியின்
ஒரு வார்த்தைக்காய் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP