யாரோ...இந்த பிள்ளை...
முச்சந்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !
அரச மரம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !
ஆத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !
குளத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !
மஞ்சள் பொடி என்றால்
இந்த பிள்ளையுண்டு !
களிமண் என்றால்
இந்த பிள்ளையுண்டு !
கண் திருஷ்டி என்றால்
இந்த பிள்ளையுண்டு !
கருப்பு எரும்பு என்றால்
இந்த பிள்ளையுண்டு !
கன்னி மூலை என்றால்
இந்த பிள்ளையுண்டு !
அருகம்புல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
எருக்கம்பூ என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
தேங்காய் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
மாம்பழம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
கொழுக்கட்டை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
சுண்டல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
அப்பம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
கரும்பு என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
மஹாபாரதம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !
யானை என்றால்
இந்த பிள்ளையுண்டு !
சதுர்த்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !
குடை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !
மூஞ்சூறு என்றால்
இந்த பிள்ளையுண்டு !
பசுஞ்சாணம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !
வெள்ளெருக்கு என்றால்
இந்த பிள்ளையுண்டு !
சுழி என்றால்
இந்த பிள்ளையுண்டு !
யாரோ !?!
இந்த பிள்ளை
யாரோ !?!
இவரே பிள்ளையாரோ !!!
சங்கடங்கள் நீக்க
சதுர்த்தியில்
வந்த பிள்ளையே !!!
சிவனையும் எதிர்த்து,
தாய் சொல்லைக் காக்க
வந்த பிள்ளையே !!!
அம்மையப்பனே உலகம்
என எல்லோருக்கும் சொல்ல
வந்த பிள்ளையே !
எல்லோருக்கும் பிள்ளையே !!!
சமத்துப்பிள்ளையே !!!
கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!!
கொழுக்கட்டை பிள்ளையே !!!
ஊரும் உலகமும்
கொண்டாடும் பிள்ளையே !!!
தொந்திப்பிள்ளையே !!!
தந்தப்பிள்ளையே !
பிள்ளைகள் கொண்டாடும்
பிள்ளையே !!!
வா !
வா !
உனக்காகவே
நாங்கள்
ஆசை ஆசையாய்
காத்திருக்கிறோம் !
அப்பம், பழம், கரும்பு...
கூடவே எங்கள் அன்பும்...
உனக்காகவே....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக