ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஆடிப்பெருக்கு !

ஆடிப்பெருக்கு...
காவிரி பெருக அருள் செய் ரங்கா...

ஆடிப்பெருக்கு...
யாரிடம் கெஞ்சவேண்டும்
என்கிறாய்...
மற்றவரிடமா...
உன்னிடமா...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களுக்குத் தான்
பொறுப்பில்லை...
அக்கரையுமில்லை...
உனக்குண்டே...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரி காய்ந்தால்
யாருக்கு அவமானம்...
எங்களுக்கா ?!?
உனக்கா ?!?
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
நாங்கள் வந்தோம்...
போய்விடுவோம்...
நீ தான் இங்கே நிரந்தரம்...
உனக்குத்தான் காவிரி...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களைவிட
காவிரியை
அனுபவித்தவன்,
அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்போகிறன்...
நீயே...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
ஆழ்வார்கள் சொல்..
மறந்ததோ...
திருப்பாணன் பாடல்
மறந்ததோ...
காவிரி மஹிமை...
மறந்தனையோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஆளவந்தார் குளித்ததும்
பொய்யோ...
எங்கள் யதிராசன்
தவராசன் படித்துறையும் பொய்தானோ...
மௌனமேன்...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரியின் அலைக்கை
வருடல் கசந்ததோ...
மணல் கை வருடல்
சுகமானதோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஸ்ரீரங்கம் பூலோக
வைகுண்டமாமே...
காவிரி விரஜா
நதியாமே...
விரஜையில் மண்தான்
இருக்குமோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
சித்திரான்னம் போதுமோ...
வயல் விளைய
வேண்டாமோ...
உன் நெல் உண்டியல்
நிரம்பவேண்டாமா...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
உனக்கே அக்கறையில்லை
என்றால்,,,
என்ன செய்ய...
யாரிடம் சொல்ல...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
இந்த ஆடிப்பெருக்கில்,
எங்கள் கண்ணீரே,,,
பெருகுகிறது...
இனிவரும் காலமெல்லாம்...
காவிரி பெருகட்டும்...
மனம் குளிர...
வயிறு குளிர...
மண் குளிர...
ஆழ்வார் குளிர...
பெருகட்டும்....
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
அடி ரங்கநாயகி...
உன் கணவனிடம்...
ஏதேதோ, வாயில்
வந்தபடியெல்லாம்...
பேசிவிட்டேன்...
நீதான் அரங்கனுக்கு
எடுத்துச் சொல்லி...
அவர் பெயரைக்
காப்பாற்றிக்கொள்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP