கருடா சௌக்கியமா !!!
கருடா சௌக்கியமா !!!
கஷ்யபரின்
தவப்புதல்வா...
கருடா சௌக்கியமா !!!
வினதையின்
கடைக்குட்டியே...
கருடா சௌக்கியமா !!!
அருணனின்
சகோதரனே !
கருடா சௌக்கியமா !!!
அமிர்த கலசத்தை
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!
வினதையின் அடிமைத்தனத்தை மாற்றினவனே !
கருடா சௌக்கியமா !!!
நாரணனுக்கும் வரம்
தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!
நாரணனிடம் வரம்
பெற்றவனே !
கருடா சௌக்கியமா !!!
நாரணனின் கொடியில்
ஜொலிப்பவனே !
கருடா சௌக்கியமா !!!
கண்ணனை முதுகில்
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!
ருக்மிணிக்காக தூது
போனவனே !
கருடா சௌக்கியமா !!!
பகவானுக்காக சுமுகனை
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!
வேதமே சிறகுகளாய்
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!
வானமாமலையில்
தவம் செய்தவனே !
கருடா சௌக்கியமா !!!
திருநறையூரின்
கல் நாயகனே !
கருடா சௌக்கியமா !!!
ஸ்ரீரங்கத்தின்
மிகப்பெரியோனே !
கருடா சௌக்கியமா !!!
நிகமாந்த மஹாதேசிகருக்கு
ஹயக்ரிவரை தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!
நான் உன்னை
இத்தனை முறை கேட்டேனே...
சௌக்கியமா என்று...?
நீ என்னைக் கேட்டாயா ?!?
கேள் ! சொல்கிறேன் !
கேட்காமலும் சொல்லுவேன் !
ஏதோ பூமிக்குப் பாரமாய் இருக்கிறேன் !
உன் பலமோ பெரிது !
என் மனமோ சிறிது !
உன் அலகால் என்னைத் தூக்கி,
வைகுந்தத்தில் போட்டுவிடு !
இதுவே நான் வைகுந்தம் அடைய சுலபமான வழி !
நீ என்னை
வைகுந்தத்தில் போட்டால்,
உனக்குத்தான் பெருமை !!!
ஏனென்றால் உன் பலம், சக்தி வைகுந்தமே உணரும் !!!
இன்று உன் பிறந்தநாள் !
சீக்கிரம் என்னை வைகுந்தத்தில் போடு !
கர்மாவும் செய்யாமல்,
ஞானமும் இல்லாமல்,
பக்தியும் பண்ணாமல்,
வெறுமனே இருக்கும்
இந்த ஜீவனை உடனே
வைகுந்தத்தில் சேர்த்து,
உன் பிறந்தநாளில்,
பெருமை தேடிக்கொள் !!!
கருடா சௌக்கியமா !!!
சொல்லிவிட்டேன்...
இனி உன் பாடு...