ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 மே, 2017

ஆயிரம் வந்ததோ !!!

தன்னை உணர்த்திய திருமேனியோ,
ஆழ்வார் திருநகரியிலே...

தமர் உகந்த திருமேனியோ, மேல்கோட்டையிலே...

தாம் உகந்த திருமேனியோ,
ஸ்ரீபெரும்புதூரிலே...

தானே ஆன திருமேனியோ,
ஸ்ரீரங்கத்திலே...

எல்லாம் தரும் திருமேனியோ...
எங்கள் ராமானுஜருக்கு...

எதுவும் தரும் திருமேனியோ...
எங்கள் ராமானுஜருக்கு...

நூற்றந்தாதியும் போதுமோ...
எங்கள் ராமானுஜருக்கு...

நூற்றெட்டு நாமமும் போதுமோ...
எங்கள் ராமானுஜருக்கு...

ஆயிரமும் வந்ததோ...
ஆனந்தமும் வந்ததோ...

வசந்தமும் வந்ததோ...
வைகுந்தமும் வந்ததோ...

நெஞ்சம் நிறைந்ததோ...
உள்ளம் உருகியதோ...

உடலும் சிலிர்த்ததோ...
உயிரும் தித்தித்ததோ...

கண்ணீர் வழிந்ததோ...
வாழ்வே செழித்ததோ...

எங்கள் எதிராசன்
ஆயிரத்தில்...
எங்கள் தவராசன்
ஆயிரத்தில்...
எங்கள் திருப்பாவை ஜீயர்
ஆயிரத்தில்...
எங்களுக்கும் புவியில் ஒரு மனிதப்பிறவி...

ராமானுஜா உமது
ஆயிரத்தில்
எம்மையும் வாழவைத்தீரே !

எமக்கும் ஏற்றம் தந்தீரே !

உம் கருணையே கருணை !

நன்றாயிரும் !
இன்னும் நன்றாயிரும் !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP