ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சங்கரா !

சங்கரா !
உள்ளபடி நீ யார் ?!?
ஜீவனான ப்ரும்மமா !?!
ப்ரும்மமான ஜீவனா !?!

சங்கரா !
மத மாற்றத்தை அன்றே எதிர்த்து நன்றாய் ஜெயித்தவன் நீ !

சங்கரா !
உலகிற்காக உன்னைப் பெற்ற அன்னையை துறந்தவன் நீ !

சங்கரா !
சூனியத்தில் காணாமல் போன,
இந்து தர்மத்தை மீட்டவன் நீ !

சங்கரா !
ப்ரும்மம் சத்தியம் என்று
அன்றே சத்தியம் செய்தவன் நீ !

சங்கரா !
அன்பு நெல்லிக்கனிக்கு
தங்க நெல்லிக்கனி தந்தவன் நீ !

சங்கரா !
இளவயதில் இமயம் ஏறி
தளராத தவமிருந்தவன் நீ !

சங்கரா !
பதரிநாதனை பக்குவமாய்
பிரதிஷ்டை செய்தவன் நீ !

சங்கரா !
காபாலிகனுக்கு உன்னைத் தந்து,
சிஷ்யனுக்கு நரசிம்மனைத் தந்தவன் நீ !

சங்கரா !
காமத்தை உணர கூடு விட்டு கூடு பாய்ந்தும் சிக்காதவன் நீ !

சங்கரா !
அசடனையும், ஆச்சரியமாய்
தோடகம் பாடவைத்தவன் நீ !

சங்கரா !
பாரதத்தின் நான்கு எல்லையிலும்,
அரணாய் மடம் நிறுவியவன் நீ !

சங்கரா !
மாயையைப் புரியவைத்தவன் நீ !
ஜீவனை உணர்த்தியவன் நீ !

சங்கரா !
காலடியில் வந்தவன் நீ !
காலடியால் உலகை வென்றவன் நீ !

சங்கரா !
கோவிந்த பாதம் பிடித்தவன் நீ !
கோவிந்த பஜனை சொன்னவன் நீ !

சங்கரா !
உன் ஞானம் உள்ளபடி
உணர்ந்தவர் யாரிங்கே ?!?
உன்னைத்தான் உள்ளபடி
அறிந்தவர் யாரிங்கே ?!?
உன் வார்த்தை உள்ளபடி
புரிந்தவர் யாரிங்கே ?!?

சங்கரா !
உள்ளபடி நீ
என்றும் புரியாத புதிர் !!!

சங்கரா !
இன்று உன் பிறந்தநாள் !!!
வருவாயா ?!?
சொல்வாயா ?!?
அருள்வாயா ?!?
தருவாயா ?!?

Read more...

அன்று நடந்த !

அன்று நடந்த திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு...

காஞ்சிபுரத்திலிருந்து கங்காயாத்திரைக்கு
யாதவ ப்ரகாசரோடு
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின் திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெரிய நம்பிகளோடு,
ஸ்வாமி ஆளவந்தாரை தரிசிக்க ஸ்ரீரங்கத்திற்கு
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெருந்தேவி தாயார்,
வரதராஜனுக்காக,
சாலைக்கிணற்றிலுருந்து,
தீர்த்தம் கொண்டுவர
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின் திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திவ்யதேச யாத்திரையாக
பாரத தேசம் முழுதும்
பவித்திரமாக்க
அன்று நடந்த,
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ப்ரும்மசூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுத
காஷ்மீரத்திற்கு கடமையோடு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருக்கோஷ்டியூர் நம்பியிடம்
திரு மந்திர அர்த்தத்தைப் பெற
18 முறை பக்தியோடு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பெண் பித்தன் மல்லர்தலைவனை,
ரங்க பித்தனாக்க, கொதிக்கும்
காவிரி மணலில்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

மலையப்பன் திருமால்
என நிரூபணம் செய்ய
திருமலைக்கு தீர்கமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

வேடுவரையும், கொங்கில் பிராட்டியையும் அனுக்ரஹிக்க,
ஸ்ரீரங்கம் விட்டு வேகமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

காட்டிலும் மேட்டிலும்
அலைந்து சாளக்ராமத்திற்கும்,
தொண்டனூருக்கும் வைணவத்தை காட்டித்தர
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருமண் தேடி,
திருநாரணனைத் தேடி,
திருநாராயணபுரம் அமைக்க
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ராமப்ரியனைத் தேடி,
டில்லி பாதுஷாவை நாடி,
சம்பத்குமாரனாய் பெற
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

சம்பத்குமாரனோடும்,
பீவி நாச்சியாரோடும்,
தெய்வீகக் காதலோடும் மேல்கோட்டைக்கு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

அரங்கனைக் காண,
அந்தரங்க ஆசையுடன்,
ஸ்ரீரங்கத்திற்கு குழந்தையாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

ஊர் விட்ட பெண்பிள்ளையின்
81 வாக்கியங்களைக் கேட்க
திருக்கோளூர்க்கு தெய்வீகமாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

திருப்பாவை செல்வியின்
பிரார்த்தனையான நூறு தடா தர
திருமாலிருஞ்சோலைக்கு துள்ளலாய்
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

பின்னே வரும் நாம்
வழி மாறாமல் இருக்க
வைகுந்த வாசலுக்கு
அன்று நடந்த
எங்கள் தவராசன் ராமானுஜரின்
திருப்பாதங்களுக்கு
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

அன்று நடந்த திருப்பாதங்களுக்கு,
இன்று பாடுகிறேன் பல்லாண்டு !

உய்ய ஒரே வழியான,
உடையவர் திருவடிகளுக்கு
இன்றும், என்றும், என்றென்றும்
பாடுகிறேன் பல்லாண்டு !

Read more...

சனி, 29 ஏப்ரல், 2017

ராமானுஜர் ஆயிரம்

ஆயிரம் தலை,
ஈராயிரம் கண்களுடைய, ஆதிசேஷனான,
இளையாழ்வார் ராமானுஜருக்கு ஆயிரம்...
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு,
ஆயிரம் ஆயிரம் சாகை
வேதத்தை விட ஏற்றம் தந்த
நம் கோயில் அண்ணன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம்
கைங்கரியங்கள் செய்த
லக்ஷ்மணனான
உடையவர் ராமானுஜருக்கு ஆயிரம்...
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரமான
கண்ணனைக் கண்ட
பலராமனான,
திருப்பாவை ஜீயர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

நாலாயிரம் ஆண்டுக்கு
முன்னமே, நம்மாழ்வார்
கொண்டாடி மகிழ்ந்த
பவிஷ்யதாசார்யன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி
நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம்
பக்தர்களுக்கு ஆசை ஆசையாய்
உபதேசித்த,
எம்பெருமானார் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம்
மைல்களை அக்கறையோடு
நடந்து வைணவத்தை வளர்த்த,
சடகோபன் பொன்னடி ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம்
சாத்தாத முதலிகளை
உலகிற்குத் தந்த,
ஜகதாசார்யன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம் அடிகளுக்கு
அப்பால் சென்று
காஷ்மீரத்தில் சரஸ்வதியின் துக்கம் தீர்த்த
ஸ்ரீபாஷ்யகாரர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பல கோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் மைல்கள்
ஆசையாய் நடந்து,
சம்பத்குமாரனை மீட்ட,
யதிராஜர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம் இன்னல்களுக்கு
நடுவிலும், ஆயிரம் ஆயிரம் பகவத் கைங்கர்யங்கள் செய்த
லக்ஷ்மண முனி ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆண்டுகள் ஆனபின் வந்த எமக்கும்
ஆயிரம் ஆயிரமாய் அருள் செய்யும் தேசிகேந்திரன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரம் ஆயிரம்
ஆண்டுக்கு பின் வரப்போகும்
எம் வம்சத்தார்க்கும்,
ஆயிரம் ஆயிரமாய் நன்மை செய்யப்போகும்,
காரேய் கருணை ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !

ஆயிரமாவாது திருநக்ஷத்திரம் காணும்
அற்புதன் ராமானுஜருக்கு,
ஆயிரம் ஆயிரம் கோடி வந்தனங்கள் !!!

Read more...

சனி, 22 ஏப்ரல், 2017

உறங்குவதில்லை !

விதைத்தவன்
உறங்கினாலும்,
விதைகள்
உறங்குவதில்லை !

படைப்புகள்
உறங்கினாலும்,
படைத்தவன்
உறங்குவதில்லை !

சிஷ்யர்கள்
உறங்கினாலும்,
குரு உபதேசம்
உறங்குவதில்லை !

இமைகள்
உறங்கினாலும்,
இதயங்கள்
உறங்குவதில்லை !

கண்கள்
உறங்கினாலும்,
காலங்கள்
உறங்குவதில்லை !

உணர்வுகள்
உறங்கினாலும்,
இயற்கை
உறங்குவதில்லை !

உண்டவர்
உறங்கினாலும்,
உணவு
உறங்குவதில்லை !

செய்தவர்
உறங்கினாலும்,
செயல்கள்
உறங்குவதில்லை !

ஜபிப்பவன்
உறங்கினாலும்,
ஜபங்கள்
உறங்குவதில்லை !

உடல்
உறங்கினாலும்,
உயிர்
உறங்குவதில்லை !

ஆழ்கடல் ஜீவராசிகள்
உறங்கினாலும்,
அலைகள்
உறங்குவதில்லை !

பூமியிலிருப்பவர்
உறங்கினாலும்,
பூமி
உறங்குவதில்லை !

சுவாசிப்பவர்
உறங்கினாலும்,
காற்று
உறங்குவதில்லை !

சந்திரன்
உறங்கினாலும்,
சூரியன்
உறங்குவதில்லை !

உறவினர்கள்
உறங்கினாலும்,
உறவுகள்
உறங்குவதில்லை !

எழுதியவர்
உறங்கினாலும்,
எழுத்துக்கள்
உறங்குவதில்லை !

தலையே
உறங்கினாலும்,
தலை விதி
உறங்குவதில்லை !

நம்பியவர்
உறங்கினாலும்,
நம்பிக்கை
உறங்குவதில்லை !

மருத்துவர்
உறங்கினாலும்,
மருந்துகள்
உறங்குவதில்லை !

நினைவுகள்
உறங்கினாலும்,
நிமிடங்கள்
உறங்குவதில்லை !

உலகமே
உறங்கினாலும்,
மேகங்கள்
உறங்குவதில்லை !

ஆள்பவர்
உறங்கினாலும்,
ஆண்டவன்
உறங்குவதில்லை !

பக்தர்
உறங்கினாலும்,
பக்தி
உறங்குவதில்லை !

ஞானி
உறங்கினாலும்,
ஞானம்
உறங்குவதில்லை !

அன்பர்
உறங்கினாலும்,
அன்பு
உறங்குவதில்லை !

Read more...

வியாழன், 6 ஏப்ரல், 2017

பரத தசமி !

ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?

ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !

கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !

புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !

பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?

லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!

சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !

ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் !

ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?

ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !

கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !

புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !

பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?

லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!

சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !

ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் !

நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !

தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !

இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !

நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !

ராமன் உலகைக் காக்க வந்தான் !
லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !

பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !

ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !

பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !

ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !

பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !

ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !

பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !

ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !

புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !

நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !

நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !

பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !

மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP