குரு அருள் !
குரு அருள் !!!
நாமே தடுத்தாலும்,
நம்மை தடுத்தாளும்....
நாமே விலகினாலும்,
நம்மை விலகாமல் காக்கும்...
நாமே ஒதுக்கினாலும்,
நம்மை ஒதுக்காமல் தொடரும்...
நாமே பரிகசித்தாலும்,
நம்மை மதித்து கூட இருக்கும்...
நாமே அவமதித்தாலும்,
நம் மீது அன்பைப் பொழியும்...
நாமே வெறுத்தாலும்,
நம் மீது உரிமையை நிலைநாட்டும்...
நாமே மறந்தாலும்,
நம்மை கரை சேர்க்கும்...
நாமே அவநம்பிக்கை கொண்டாலும்,
நம் மீது அவநம்பிக்கை கொள்ளாது...
நாமே வீணடித்தாலும்,
நம்மை விடாமல் பலன் தரும்...
நாமாக தப்பித்தாலும்,
நம்மைத் தொடர்ந்து வரும்...
உலகமே நம்மை தள்ளினாலும்,
உள்ளிருந்து நம்மைத் தாங்கும் !
விதியே சதி செய்தாலும்,
மதி கொடுத்து வாழ வைக்கும் !
ஹே மனிதா !
குரு அருளே
குருடனான நம்மை,
குறைவில்லாமல்
வாழவைக்கும் !
குரு அருளுக்கு நீ ஒன்றும்,
ஒரு முயற்சியும் செய்யவேண்டாம் !
அது தானாய் வரும் !
அது தேடி வரும் !
அது சத்தியமாய் வரும் !
வரும்...உன்னை மாற்றும் !
அனுபவத்தில் சொல்கிறேன் !
குருவால் மாறினவன் சொல்கிறேன் !
குருவால் வளர்ந்தவன் சொல்கிறேன் !
குருவால் வாழ்கின்றவன் சொல்கிறேன் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக