ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2017

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

அரிது...அரிது...
பூமியில் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
மனிதராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பற்றிக் கேட்டல் அரிது...

அதனினும் அரிது...
குருவைத் தேடுதல் அறிது...

அதனினும் அரிது...
குருவின் பார்வை அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பார்த்தல் அரிது...

அதனினும் அரிது...
குரு அருள் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் புரிதல் அரிது...

அதனினும் அரிது...
குருவை நம்புதல் அரிது...

அதனினும் அரிது...
குரு வார்த்தை கேட்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி வாழ ஆசைப்படுவது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி நடப்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி எல்லாம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வமாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வத்தை விட
உயர்வாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்ய நினைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்யக் கிடைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குரு உகக்கும்படி கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவோடு வாழ்வது அரிது...

அதனினும் அரிது...
குரு பெருமை உலகெலாம் செப்புவது அரிது...

அதனினும் அரிது...
குரு திருவடியில் உயிர் பிரிவது அரிது...

இப்போது புரிந்ததா...
மானிடராய் பிறத்தல் அரிது என்று ஏன் சொன்னாரென்று !!!

அரிதான பிறவியில்,
அறியாமை அழிக்கும் குருவை,
அறிவதே அறிவு...

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

இல்லையா !!!!
குருவை அறி...

இருக்கிறதா !!!
உனக்கு நமஸ்காரம் !!!

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP