ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜனவரி, 2017

பொருத்தமான பொற்கொடியே !


ஒருத்தியான தேவகிக்கு
கருத்த கண்ணன்
திருத்தமாய் பிறந்ததை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

ஒருத்தியான யசோதைக்கு
பெருத்த கண்ணன்
ஒருத்தரும் அறியாமல் வந்ததை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

ஒருத்தரும் காணமுடியா
கருத்த இரவில் யாவரையும்
திருத்த வந்த கண்ணனை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

தரிக்க முடியாமல்
வெறுத்த கம்சனை
பருத்த கஞ்சனாய்
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே!

நெருப்பென வயிற்றில் நின்று
கருத்தை மாற்றும்
வெறுப்பிலா கண்ணனை
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

அருத்தித்து வந்தோம்,
பொருத்தமான உன்னை !
வருத்தம் தீர்த்து,
மருத்துவம் செய்வாய் என,
விருத்தமாய் சொன்ன
பொருத்தமான பொற்கொடியே !

பொறுப்பும் இலாத,
பொறுத்துப் பார்க்காத,
திருத்த முடியா எம்மிடம்,
வருத்தம் கொள்ளாமல்,
திருத்தப் பார்க்கும்,
பொருத்தமான பொற்கொடியே !

கருத்தில் கண்ணனை,
திருத்தமாய் கொண்ட,
பொருத்தமான பொற்கொடியே, நீயே
திருத்தி பணி கொள் எம்மை !

மருத்தவமும் நீயே !
மருத்துவச்சியும் நீயே !

©*குருஜீ கோபாலவல்லிதாசர்*

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP