குன்றாத சேம வைப்பே !
அன்று உலகம் அளந்ததற்கு
இன்று அந்த திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
சென்று தென்னிலங்கை
வென்ற திறமைக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
நின்றிருந்த சக்கர அசுரனை
கொன்ற சிறு திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
கன்றாய் வந்த அசுரனை
குன்றிப்போக வைத்த திருவடிக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
குன்றை குடையாய் கொண்டு
கன்றினத்தை காத்த குணத்துக்கு
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
வென்று பகை கெடுத்த
நன்றான வேலுக்கும் கைக்கும்
நன்று பல்லாண்டு பாடிய
குன்றாத சேம வைப்பே !
என்றென்றும் சேவகமே
நன்றாய் கேட்ட உனக்கு
நன்றாய் பல்லாண்டு...
குன்றாத சேம வைப்பே !
குன்றாத சேம வைப்பே !
நன்றாய் உன்னை சேவிக்க
என்றும் திருவருள் தா !
இன்று உன்னிடம் தந்தோம்,
என்றும் உன்னிடமே கொள் !
நன்று எமக்கு இதுவே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக