ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 ஜனவரி, 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் ராசாத்தியடா !

சிற்றம் சிறு காலே
எழுந்தோமடா கோவிந்தா !
வந்து உன்னை
சேவித்தோமடா கோவிந்தா !

பொற்றாமரை அடி
அடைந்தோமடா கோவிந்தா !
போற்றும் காரணம்
கேளாயடா கோவிந்தா !

மாடு மேய்க்கும் குலத்தில்
பிறந்தாயடா கோவிந்தா !
அடிமையான எங்களை
ஏற்கவேண்டுமடா கோவிந்தா !

இன்று பறையென காரணம்
சொன்னோமடா கோவிந்தா !
என்றும், ஏழேழ் பிறவியிலும்
உன்னோடுதானடா கோவிந்தா !

உனக்காகவே நாங்கள்
வாழ்வோமடா கோவிந்தா !
மற்றை நம் காமங்கள்
மாற்றிவிடடா கோவிந்தா !

வேறெதுவும் வேண்டவே
வேண்டாமடா கோவிந்தா !
உன்னிஷ்டமாய் மட்டுமே
வாழவேண்டுமடா கோவிந்தா !

இப்படியெல்லாம் அழகாய்
சொன்னாளடா கோவிந்தா !
எங்கள் வில்லிபுத்தூர்
ராசாத்தியடா கோவிந்தா !

ராச வாழ்க்கை
வேண்டாமடா கோவிந்தா !
ராசாத்தி சொத்தாய் வாழ
வைப்பாயடா கோவிந்தா !

ராசாத்தியின் அந்தப்புரமாக
மனமாகட்டுமடா கோவிந்தா !
ராசம் நீயும் அவளும்
ஆடவேண்டுமடா கோவிந்தா !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP