ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜனவரி, 2017

தமிழ் குலக்கொழுந்தே !

ஏற்ற கலங்கள் நிரம்பி
முற்றிலும் வழிகிறதே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !

மாற்றாதே பால் தரும் பசுக்கள்
நிறைந்து மேய்கிறதே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஆற்றப்படைத்தவன்
மாற்றமில்லா நந்தகோபனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !

ஏற்றமுடை நந்தகோபனின்
ஒற்றை மகன் கண்ணனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஏற்றம் தரும் கண்ணனை
அறிவுற்று உறவாட வா...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


ஊற்று போல் பொங்கும்
ஆற்றல் உடையவன் கண்ணனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


நாற்றமிலா தேவரும்
நாற்றமுடை மனிதரும்
போற்றும் பெரியோனே..
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


தோற்றம் இலாத சுடரே
தோற்றமாய் நின்ற சுடரே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


குற்றம் நிறை உலகில்
குற்றம் தீர்க்க துயிலெழாய்...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


மாற்றாரும் வலி தொலைய
மற்றாரும் அடி பணிய வந்தவனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


போற்றுவார் போற்றினாலும்
தூற்றுவார் தூற்றினாலும்
ஆற்றாது அடி பணிய வைப்பவனே...
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !


பெற்றோரையும் விட்டு
உற்றோரையும் மறந்து
போற்றி யாம் வந்தொம்
என்று நன்றாய் சொன்ன
தமிழ் குலக்கொழுந்தே !



பொற்றாமரைப் பாதங்கள்
சிற்றாமரை விரல்கள் கொண்ட
குற்றமிலா பாவையே !
ஊற்றமுடை நெஞ்சும்,
ஏற்றமுடை பக்தியும்,
மாற்றமிலாமல் தா நீயே !


குற்றமுடை எமக்கு
சீற்றமுடை நாயகனை விட
சீற்றமிலாத நாயகியே
சுற்றமும், மற்றுமும் !


பற்றுடை எமக்கு
ஆற்று நீராய் பாசுரங்கள்
ஊற்று நீராய் அனுபவங்கள்
பற்றோடு தரும் பாவையே !
வெற்றியே உனக்கு !
நற்றுணையே நீ எமக்கு !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP