மார்கழி நாயகி நீயே !
முப்பத்து மூவருக்கும்
முதல்வன் நீயே !
முன் சென்று எல்லாம்
தீர்ப்பவன் நீயே !
என்று சொன்னாயே ,
மார்கழி நாயகி நீயே !
தேவைக்காக வரும்
தேவருக்காக பரிபவன் நீயே !
தேவையை தெளிவாய்
தெரிந்தவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
கலியின் கொடுமை தீர்
கலியே நீயே !
துளியும் யோசிக்காமல்
துயிலெழாய் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
பக்தரைக் காப்பதில்
வல்லவன் நீயே !
பக்தரின் விரோதியை
அழிப்பவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
தப்பே செய்பவருக்கு
வெப்பம் தந்து,
தப்பில்லாமல் தட்டிக் கேட்டு
தப்பைத் திருத்துபவன் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
அமலனும் நீயே !
நிமலனும் நீயே !
விமலனும் நீயே !
கமலனும் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
மென் முலையாள் நீயே !
மெல்லிடையாள் நீயே !
செவ்வாயினாள் நீயே !
செல்வி நீயே நப்பின்னாய் !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
திருவுக்கும் திரு நீயே !
தரும் தெய்வம் நீயே !
துயிலெழுவாய் நீயே !
நப்பின்னாய் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
உக்கமான விசிறியை
ஊக்கமாக தந்து,
தட்டொளியான கண்ணாடியை,
சட்டெனவே தந்து,
பட்டென அருள் நீயே !
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
உன் மணாளனும் நீயும்,
நின் அடிமையான எமக்கு,
நீர் ஆடி ஆடி வந்து,
நீராட்ட வேண்டுமே,
என்று சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
மார்கழியில் நாள் கழிய,
மார்கழியில் பாவம் கழிய,
மார்கழியில் வினை கழிய,
மார்கழியில் அகம் கழிய,
மார்கழியில் பாவை சொன்னாயே !
மார்கழி நாயகி நீயே !
மார்கழிக்கும் நாயகி நீயே !
மாறாதவனுக்கும் நாயகி நீயே !
மாறாத நாயகியும் நீயே !
மாற்றம் தரும் நாயகியும் நீயே !
மார் தட்டி சொல்லுவோம் நாமே !
மார்கழியில் உன் நாமமே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக