ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 டிசம்பர், 2016

பாணன் வந்தானடி...

பாணன் வந்தானடி...
காவிரி...
உன் மடி மீதினிலே...

பாணன் பிறந்தானடி...
காவிரி...
கார்த்திகை ரோகியினிலே...

பாணன் நின்றானடி...
காவிரி...
உன் கரை மீதினிலே...

பாணன் அழுதானடி...
காவிரி...
ஸ்ரீரங்கனின் நினைவினிலே...

பாணன் சிரித்தானடி...
காவிரி...
பக்தியின் பித்தினாலே...

பாணன் புலம்பினானடி...
காவிரி...
ரங்கனின் நாமத்தினாலே...

பாணன் சேவித்தானடி...
காவிரி...
ஸ்ரீரங்கத்தைக் கண்டதினாலே...

பாணன் நுழைந்தானடி...
காவிரி...
ரங்கனின் கருணையாலே...

பாணன் பாடினானடி...
காவிரி...
சாரங்க முனியின் தோளினிலே...

பாணன் மயங்கினானடி...
காவிரி...
அமலனாதிபிரான் அழகினிலே...

பாணன் தந்தானடி...
காவிரி...
அமுதன் அரங்கன் திருவடியினிலே...

பாணன் வாழ்கிறானடி...
காவிரி...
இன்றும் உன் மடிதனிலே...

என்னையும் சேர்த்துவிடடி...
காவிரி...
அந்த பாணனின் திருவடியிலே...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP