ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 டிசம்பர், 2016

துளசியின் கீழுதித்த தூமணியே !

கோயில் காப்பவரை
நாயகனாய் கண்டாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !


கோயிலை நந்தகோபரின்
மாளிகையாய் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


கொடியையும், தோரணத்தையும்,
வாயிலில் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


வாயில் காப்பவரையும்
உயர்வாய்க் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


மணியால் நிறைந்த
கதவைக் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


கதவின் தாள் திறக்க
காப்போரைக் கெஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


ஆயர் சிறுமியாய் உன்னை
மாற்றிக்கொண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


மாயன் மணிவண்ணன்
வாய் நேர்ந்ததை சொன்னாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !


தூயோமாய் வந்தோம்
தூயனைக் காண என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துயிலெழப் பாடுவோம்
துஞ்சுபவனுக்கே என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


வாயால் மாற்றாதே
அம்மா எனக் கொஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


நேய நிலைக்கதவை
நன்றாய் திற என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


எல்லோரும் தொண்டரே !
அவர் அடி பணி என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துள்ளும் இளமையை
தூய்மையாய் தரச் சொன்னாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


துப்பில்லாத எம்மை
துளசியாய் மாற்ற வந்தாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !


தூயவனின் துளசியாய் நீ !
தூசியாய் உன் திருவடியில் யாம் !
துளசியின் கீழுதித்த தூமணியே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP