ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 டிசம்பர், 2016

பிஞ்சாய் பழுத்தவளே !

கறவைகள் பல கறந்தவர் அன்றோ...
செற்றார் திறல் அழிப்பவர் அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


சென்று செறுச் செய்பவர் அன்றோ...
குற்றமேயில்லாத கோவலர் அன்றோ...
எனச் சொல்லும்,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


கோவலரின் பொற்கொடியே அன்றோ..
அரவு போல், மயில் போல், அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


உடனே போதராய் அன்றோ,
சுற்றத்து தோழிமார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


எல்லோரும் வந்தார் அன்றோ,
நின் முற்றம் புகுந்தார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


முகில்வண்ணன் பேர் அன்றோ,
அழகாய் பாடுகிறார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


சிற்றாமல், பேசாமல் அன்றோ,
செல்வப் பெண்டாட்டி அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !

ஏன் உறங்குகிறாய் அன்றோ,
என்ன காரணம் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


நஞ்சே நெஞ்சமான எம்மிடம்,
பிஞ்சுக் குழந்தையைக்
காண்பவள் நீயே அன்றோ,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !


வஞ்சம் நிறை உலகில்,
நெஞ்சம் நிறை அன்போடு,
கொஞ்சிப் பேசும் வஞ்சி,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றோ !


பிஞ்சிலே வெம்பிய எமக்கு,
தஞ்சமாய் வந்த தெய்வம்,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றொ !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP