பிஞ்சாய் பழுத்தவளே !
கறவைகள் பல கறந்தவர் அன்றோ...
செற்றார் திறல் அழிப்பவர் அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
சென்று செறுச் செய்பவர் அன்றோ...
குற்றமேயில்லாத கோவலர் அன்றோ...
எனச் சொல்லும்,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
கோவலரின் பொற்கொடியே அன்றோ..
அரவு போல், மயில் போல், அன்றோ...
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
உடனே போதராய் அன்றோ,
சுற்றத்து தோழிமார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
எல்லோரும் வந்தார் அன்றோ,
நின் முற்றம் புகுந்தார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
முகில்வண்ணன் பேர் அன்றோ,
அழகாய் பாடுகிறார் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
சிற்றாமல், பேசாமல் அன்றோ,
செல்வப் பெண்டாட்டி அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
ஏன் உறங்குகிறாய் அன்றோ,
என்ன காரணம் அன்றோ,
எனச் சொல்லும்
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
நஞ்சே நெஞ்சமான எம்மிடம்,
பிஞ்சுக் குழந்தையைக்
காண்பவள் நீயே அன்றோ,
எங்களின் பிஞ்சாய் பழுத்தவளே !
வஞ்சம் நிறை உலகில்,
நெஞ்சம் நிறை அன்போடு,
கொஞ்சிப் பேசும் வஞ்சி,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றோ !
பிஞ்சிலே வெம்பிய எமக்கு,
தஞ்சமாய் வந்த தெய்வம்,
பிஞ்சாய் பழுத்த நீயேயன்றொ !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக