ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

கண்ணனின் ப்ரியசகி !

நோன்பு நோற்பவளை,
சுவர்க்கம் புகுகிறவளை,
அன்பான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !

மாற்றமும் தராதவளை,
வாசல் திறவாதவளை,
அழகான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


நாறும் துழாய் முடியன்
நாராயணனை நினைப்பவளை,
அடக்கமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


போற்றக் கிருபை செய்யும்
புண்ணியனை சிந்திப்பவளை,
அருமையான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்பகர்ணனை வென்றவளை,
அதிசயமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


பெருந்துயில் கொள்பவளை,
ஆற்ற அனந்தலுடையாளை,
அனைவருக்கும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


அருங்கலமாய் வந்தவளை,
தியானத்தில் திளைப்பவளை,
அருட்பெரும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


தேற்றமாய் வந்தவளை,
திறந்து வந்தவளை,
அமுதமான சகியை,
அழைக்கும் கண்ணனின் ப்ரியசகியே !


அருந்தவம் செய்யவில்லை,
ஆசையும் குறையவில்லை,
பக்தியும் போதவில்லை,
ஆயினும் எம்மையும்,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !


ப்ரியனான கண்ணனின்,
ப்ரியத்தை புரியவைத்து,
ப்ரியமாய் எமக்கருளும்,
கண்ணனின் ப்ரியசகியே,
நீயே எங்கள் சகியும், சக்தியும்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP