கண்ணனின் ப்ரியசகி !
நோன்பு நோற்பவளை,
சுவர்க்கம் புகுகிறவளை,
அன்பான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
மாற்றமும் தராதவளை,
வாசல் திறவாதவளை,
அழகான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
நாறும் துழாய் முடியன்
நாராயணனை நினைப்பவளை,
அடக்கமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
போற்றக் கிருபை செய்யும்
புண்ணியனை சிந்திப்பவளை,
அருமையான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்பகர்ணனை வென்றவளை,
அதிசயமான சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
பெருந்துயில் கொள்பவளை,
ஆற்ற அனந்தலுடையாளை,
அனைவருக்கும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
அருங்கலமாய் வந்தவளை,
தியானத்தில் திளைப்பவளை,
அருட்பெரும் சகியை,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
தேற்றமாய் வந்தவளை,
திறந்து வந்தவளை,
அமுதமான சகியை,
அழைக்கும் கண்ணனின் ப்ரியசகியே !
அருந்தவம் செய்யவில்லை,
ஆசையும் குறையவில்லை,
பக்தியும் போதவில்லை,
ஆயினும் எம்மையும்,
எழுப்பும் கண்ணனின் ப்ரியசகியே !
ப்ரியனான கண்ணனின்,
ப்ரியத்தை புரியவைத்து,
ப்ரியமாய் எமக்கருளும்,
கண்ணனின் ப்ரியசகியே,
நீயே எங்கள் சகியும், சக்தியும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக