அரங்கனின் காதலியே !
தூமணியைக் கண்டாயோ,
மாடத்தைக் கண்டாயோ,
விளக்கெறியக் கண்டாயோ...
அரங்கனின் காதலியே !
தூபம் கமழக் கண்டாயோ,
துயிலணையைக் கண்டாயோ,
கண் வளரக் கண்டாயோ,
அரங்கனின் காதலியே !
சொந்தம் கொண்டாயோ,
மாமன் மகளாய்க் கண்டாயோ,
மணிக்கதவைக் கண்டாயோ,
அரங்கனின் காதலியே !
தாள் திறக்கச் சொன்னாயோ,
திறவாதிருக்கக் கண்டாயோ,
மாமீரை அழைத்தாயோ,
அரங்கனின் காதலியே !
மகளை எழுப்பச் சொன்னாயோ,
மகள் ஊமையோ என்றாயோ,
மகள் செவிடோ என்றாயோ,
அரங்கனின் காதலியே !
மகள் சோம்பேறியோ என்றாயோ,
மகள் கண் துயின்றாளோ என்றாயோ,
மகள் மந்திரப்பட்டாளோ என்றாயோ,
அரங்கனின் காதலியே !
மாமாயன் என்றே சொன்னாயோ,
மாதவனும்
சொன்னோம் என்றாயோ,
வைகுந்தன் என்றும் சொன்னாயோ,
அரங்கனின் காதலியே !
நாமம் பலவும் நவின்றாயோ,
நன்மையை அடையச் சொன்னோயோ,
நாராயணனே நன்மை என்றாயோ
அரங்கனின் காதலியே !
எல்லாம் சொல்லியே,
எம்மையும் எழுப்பியே,
இன்பமும் தந்தாயே,
அரங்கனின் காதலியே !
அந்த ரங்கத்தின்
சொந்த ரங்கனை
அந்தரங்கத்தில் கொண்ட
அரங்கனின் காதலியே !
எங்கள் அந்தரங்கம்,
உங்கள் அந்தப்புரமாக,
நீங்கள் இங்கே வந்து
தங்க வரம் தா,
அரங்கனின் காதலியே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக