எங்கள் ராமானுஜரின் தங்கையே !
பறவைகள் எழுந்தன...
ஒன்றாய் கூடிப் பேசின...
கோயிலில் திரண்டன...
என ஆசையாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
காலை வந்தது...
கோயில் திறந்தது...
சங்கம் முழங்கியது...
என உற்சாகமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
பிள்ளாய் ! எழுந்திராய்...
நாமும் அனுபவிப்போம்...
இந்த நாள் இறைவன் நாள்...
என உள்ளன்போடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
விஷப்பால் சுவைத்தான்...
பூதனா உயிரைக் குடித்தான்...
மோக்ஷம் தந்தான்...
என பக்தியோடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
கள்ளச் சகடமாய் வந்தான்...
கண்ணனே உதைத்தான்..
மோக்ஷம் பெற்றான்...
என குதூகலமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
திருப்பாற்கடலில் படுத்தான்...
திருவனந்தன் மேல் துயின்றான்...
வேதவித்து நம் கண்ணன்...
என உருக்கமாய்
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
உள்ளத்துக் கொண்டார்...
மெள்ள எழுந்தார்...
ஹரி என சொன்னார்...
என யோகிகளோடு
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
உள்ளம் புகுந்து,
பேரரவம் செய்து,
குளிரவைத்து,
உரிமையோடு அன்புகொண்டு,
எங்களையும் எழுப்பும்
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
உன் திருவடி தொழுதோம்...
உன் அன்பில் கரைந்தோம்...
உன் அருகில் நின்றோம்...
உன் உருவில் மயங்கினோம்...
உன் நிழலில் இளைப்பாறினோம்...
உன் அருளாலே வாழ்வோம்..
எங்கள் ராமானுஜரின் தங்கையே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக