தந்தோமடி கோதாதேவியே!
ஆழிமழைக் கண்ணனும்,
தன் தாபம் நீங்க
உன்னடி பணிந்தானடி
கோதா தேவியே !
ஆழிமழை அண்ணலை
ஒளித்து வைக்காமல்
தரச்சொன்னாயடி
கோதா தேவியே !
ஆழியுள் புகுந்து
முகந்து கொண்டு
வரச்சொன்னாயடி
கோதா தேவியே !
மழை அண்ணனை
ஊழி முதல்வன் போலே
கறுக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !
மழை மின்னலும்,
பத்மநாபன் கையாழியாய்
மின்னச் சொன்னாயடி
கோதா தேவியே !
இடியும் பத்மநாபனின்
கைச் சங்கம் போலே
முழங்கச் சொன்னாயடி
கோதா தேவியே !
மழையும் பத்மநாபனின்
சார்ங்க வில்லின் அம்புகள்
போலே பெய்யச் சொன்னாயடி
கோதா தேவியே !
பெய்யும் மழையும்,
பத்மநாபனைப் போலே
வாழவைக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !
உன்னோடு எங்களையும்
மார்கழி நீராட வைத்து
மகிழச்செய்தாயடி
கோதா தேவியே !
இத்தனையும் தந்த உனக்கு
எங்களையே தந்தோமடி,
ஏற்றுக்கொள்வாயடி,
எங்கள் கோதா தேவியே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக