ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 டிசம்பர், 2016

தந்தோமடி கோதாதேவியே!

ஆழிமழைக் கண்ணனும்,
தன் தாபம் நீங்க
உன்னடி பணிந்தானடி
கோதா தேவியே !


ஆழிமழை அண்ணலை
ஒளித்து வைக்காமல்
தரச்சொன்னாயடி
கோதா தேவியே !


ஆழியுள் புகுந்து
முகந்து கொண்டு
வரச்சொன்னாயடி
கோதா தேவியே !


மழை அண்ணனை
ஊழி முதல்வன் போலே
கறுக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


மழை மின்னலும்,
பத்மநாபன் கையாழியாய்
மின்னச் சொன்னாயடி
கோதா தேவியே !


இடியும் பத்மநாபனின்
கைச் சங்கம் போலே
முழங்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


மழையும் பத்மநாபனின்
சார்ங்க வில்லின் அம்புகள்
போலே பெய்யச் சொன்னாயடி
கோதா தேவியே !


பெய்யும் மழையும்,
பத்மநாபனைப் போலே
வாழவைக்கச் சொன்னாயடி
கோதா தேவியே !


உன்னோடு எங்களையும்
மார்கழி நீராட வைத்து
மகிழச்செய்தாயடி
கோதா தேவியே !


இத்தனையும் தந்த உனக்கு
எங்களையே தந்தோமடி,
ஏற்றுக்கொள்வாயடி,
எங்கள் கோதா தேவியே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP