ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 டிசம்பர், 2016

பணிந்தோமடி கோதை...

மார்கழித் திங்களும் வந்ததடி
கோதை...

மதி நிறைந்த நன்னாளானதடி
கோதை...

உன்னோடு நீராட வந்தோமடி
கோதை...

திருப்பாவை பாட வந்தோமடி
கோதை...

உன் இடமே எமக்கு ஆய்ப்பாடியடி
கோதை...

செல்வச் சிறுமியராய் ஆயினோமடி
கோதை...

நந்தகோப குமரனைக் காட்டடி
கோதை...

யசோதை இளஞ்சிங்கத்தைக் கூப்பிடடி
கோதை...

கார்மேனி செங்கண்ணனை வரச்சொல்லடி
கோதை...

நாராயணனை
நமக்கே தரச்சொல்லடி கோதை...

தன்னையே தரச்சொல்லடி கோதை...

உனக்காக எங்களுக்கும்
தருவானடி
கோதை...

உன்னையே பணிந்தோமடி கோதை...

உன் புகழே பாடுவோமடி
கோதை...

நீயே எங்களுக்கு பறையடி
கோதை...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP