ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 டிசம்பர், 2016

மார்கழி வருகிறாள்...

வருகிறாள் மார்கழி...
மார்கழி வருகிறாள்...

நல்ல பனியோடும்,
பெரிய கோலங்களோடும்,
மார்கழி வருகிறாள்...

அற்புதமான குளிரோடும்,
ஜோரான பூசணிப் பூக்களோடும்
மார்கழி வருகிறாள்...

அழகான பஜனையோடும்,
சூடச்சுட பொங்கலோடும்,
மார்கழி வருகிறாள்...

ஆண்டாள் நாச்சியாரோடும், அவள் தோழிகளோடும்
மார்கழி வருகிறாள்...

திருப்பாவையோடும், கோபிகைகளின் விரதத்தோடும்
மார்கழி வருகிறாள்...

வைகுண்ட ஏகாதசியோடும்,
மோக்ஷத்தோடும்
மார்கழி வருகிறாள்...

க்ருஷ்ணரின் குசேலரோடும், அவரின்
அவலோடும்
மார்கழி வருகிறாள்...

தொண்டரடிப்பொடியாழ்வாரோடும், ஹனுமத் ஜெயந்தியோடும்
மார்கழி வருகிறாள்...

நம்மை ஆட்கொள்ள
க்ருஷ்ணனாகவே
மார்கழி வருகிறாள்...

சம்சார தாபத்தை தீர்த்து,
பக்தியில் திளைக்கவைக்க
ஆசையோடு
மார்கழி வருகிறாள்...

வா...வா...
மார்கழியைக் கொண்டாடுவோம்...
வா...வா...
மார்கழியை அனுபவிப்போம்...
வா...வா...
மார்கழியில் திளைப்போம்....

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP