ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 டிசம்பர், 2016

வேறொன்றும் வேண்டாமடி !

கீழ் வானம் வெளுத்ததடி,
எருமைகள் எழுந்ததடி,
நீயும் எழுந்து வ்ந்துவிடடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



மற்ற பிள்ளைகள் போனாரடி,
உன் பேரே சொன்னோமடி,
உடனே அவரும் நின்றாரடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



உன்னைக் கூவ வந்தோமடி,
கோதுகலமான பாவையடி,
நீயும் எழுந்து வாராயடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



பாடிப் பறை கொள்வோமடி,
மாவாயைப் பிளந்தானடி,
மல்லரையும் வென்றானடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



நம் தேவாதி தேவனடி,
சென்று நாம் சேவிப்போமடி,
ஆவாவென்று சொல்வானடி,
என்று சொல்லும் தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



ஆராய்ந்து அருள்வானடி,
உடனேயே அருள்வானடி,
அழகாய் அருள்வானடி,
என்று சொன்ன தோழியடி,
நீ எங்கள் நாச்சியாரடி...



இத்தனை சொல்பவள் நீயேயடி,
எம்மேல் அன்பு உனக்கேயடி,
இந்த உரிமை போதுமடி,
வேறொன்றும் வேண்டாமடி,
நீ எங்கள் நாச்சியாரடி...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP