ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 பிப்ரவரி, 2016

பூரணமாய் உண்டாகட்டும் !

உன் மனதின் காமங்கள் அழிந்து
பூரணமான சாந்தி உண்டாகட்டும் !

உன் மனதின் குழப்பங்கள் தீர்ந்து
பூரணமான நிம்மதி உண்டாகட்டும் !

உன் மனதின் கோபங்கள் ஒழிந்து
பூரணமான திருப்தி உண்டாகட்டும் !

உன் மனதின் சந்தேகங்கள் கழிந்து
பூரணமான அமைதி உண்டாகட்டும் !

உன் மனதின் ஏக்கங்கள் முடிந்து
பூரணமான சமாதானம் உண்டாகட்டும் !

உன் மனதின் பயங்கள் சிதைந்து
பூரணமான ஞானம் உண்டாகட்டும் !

உன் மனதின் யோசனைகள் அடங்கி
பூரணமான தெளிவு உண்டாகட்டும் !

உன் மனதில் கண்ணன் தெரியட்டும் !
உன் மனதில் கண்ணன் விளையாடட்டும் !
உன் மனது கண்ணனின் சொத்தாகட்டும் !

பூரணமாய் நீ வாழ்வை அனுபவிக்க,
பூரணமாய் நீ பக்தியில் திளைக்க,
பூரணமாய் நீ ஞானத்தில் மகிழ,
பூரணமாய் ஆசீர்வாதங்கள்....

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP