ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

வா . . . கற்போம் !

ராதேக்ருஷ்ணா


நிழலின் அருமை,
வெயிலில் தெரியும் !


வெயிலின் அருமை,
குளிரில் தெரியும் !


நீரின் அருமை,
தாகத்தில் தெரியும் !


வெளிச்சத்தின் அருமை
இருட்டில் தெரியும் !


ஆரோக்கியத்தின் அருமை
நோயில் தெரியும் !


உணவின் அருமை
பசியில் தெரியும் !


இளமையின் அருமை
முதுமையில் தெரியும் !


நேற்றின் அருமை
நாளை தெரியும் !


அன்பின் அருமை
பிரிவில் தெரியும் !


பெற்றோரின் அருமை
இழப்பில் தெரியும் !


பணத்தின் அருமை
ஏழ்மையில் தெரியும் !


மழையின் அருமை
பஞ்சத்தில் தெரியும் !


வாழ்வின் அருமை
மரணத்தில் தெரியும் !


சுத்தத்தின் அருமை
அசுத்தத்தில் தெரியும் !


மெய்யின் அருமை
பொய்யில் தெரியும் !


தைரியத்தின் அருமை
பயத்தில் தெரியும் !


கிராமத்தின் அருமை
நகரத்தில் தெரியும் !


அன்பின் அருமை
தவிப்பில் தெரியும் !


அமைதியின் அருமை
சத்தத்தில் தெரியும் !
தேசத்தின் அருமை
வெளிநாட்டில் தெரியும் !


கடவுளின் அருமை
கஷ்டத்தில் தெரியும் !


குருவின் அருமை
குழப்பத்தில் தெரியும் !


நாமஜபத்தின் அருமை
சிரமத்தில் தெரியும் !

சத்சங்கத்தின் அருமை
சம்சாரத்தில் தெரியும் !

கோயிலின் அருமை
அழுகையில் தெரியும் !

இதுபோல் பல விஷயங்கள்
விதவிதமாய்
அருமையாய் தெரியும் ! ! !

உலகைக் கொஞ்சம் பார் . . .
உள்ளபடி பார் . . .
ஒழுங்காகப் பார் . . .

உனக்கு அறிவுரை
சொல்வதாக உலகைப் பார் .  .  .

இன்னும் நீயும், நானும்
கற்றுக்கொள்ள வேண்டியது
நிறையவே உள்ளது . . .

உலகம் ஒரு சர்வகலாசாலை . . .
 அது நாளும் நமக்கு
புதியதாய் ஒன்றை
சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும் . . .

வா . . .
மீண்டும் கற்க ஆரம்பிப்போம் . . .
வா . . .
வாழ்வை கற்போம் . . .
வா . . .
நம்மைக் கற்போம் . . .
வா . . .
புதியதாய் கற்போம் . . .
வா . . .
குழந்தையாய் கற்போம் . . .

வா . . .
நாளும் கற்போம் . . .

வா. . . .
வாழ்நாள் முழுவதும் கற்போம் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP