ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 நவம்பர், 2013

அனந்தன் காடு . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
 
 
காட்டுக்கு வா . . .
 
 
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
 அனந்தபத்மநாபனின் காட்டுக்கு வா . . .
 
 
பூர்வ ஜன்ம கர்ம வினை என்னும்
காட்டை அழித்துப் போட உடனே
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
துக்க மயமான சம்சாரக் காட்டை
இல்லாமல் செய்ய வேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
காம, கோப, தாப ரூபமான
ஆசை காட்டை அழிக்க சீக்கிரமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .


சந்தேகம், பொறாமை, பயம் நிறைந்த
அஞ்ஞானக் காட்டையழிக்க அதிவேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .


நாம ஜபத்தின் பலமறிய,
பக்தியின் பெருமையை உணர, ஆசையாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
திவாகர முனிக்காய் 18 அடியாய்
படுத்திருக்கும் பத்மநாபனை தரிசிக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம்,
ஆதிதைவிகம் போன்ற தாபங்கள் நீங்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
பில்வமங்களர் தந்த உப்பு மாங்காயை
ரசித்து சுவைத்து திளைக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .


விதுரரும், பலராமரும், ஆளவந்தாரும்,
ராமானுஜரும், சைதன்யரும் அனுபவித்த
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
மூன்று வாசலில் ஆதி மூலத்தைப் பார்க்க,
மும்மூர்த்திகளை பார்க்க அழகாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
அனந்த புர நகர் புகுவாய் என்று
நம்மாழ்வாரும் வாயாரச் சொன்ன
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
மஹாராஜா ஸ்வாதித் திருநாளும்
ஆசையாய் அனுபவித்த பத்மநாபனைக் காண
அனந்தன் காட்டுக்கு வா . . .
 
 
அனந்தன் காடு தான் . . .
இன்று அனந்தபுரி . . .
அதுவே திருவனந்தபுரம் . . .
 
 
18 அடி அனந்தபத்மநாபனை
அனுபவிக்க உடனே வா . . .
 
 
இன்று ஸ்ரீ அனந்தபத்ம நாபன்
கையில் வில்லேந்தி,
ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
உடன் வர வேட்டையாட வருகிறான் . . .
 
வருவாய் . . .
நாமும் வேட்டையாடப் போவோம் . . .
 
 
ராஜாதி ராஜனான,
ஒன்றரை லக்ஷம் கோடி சொத்துக்குரியவனோடு,
ஆனந்தமாய் வேட்டையாடப் போகலாம் வா . . .
 
 
சீக்கிரம் வா . . .
வேட்டைக்கு பத்மநாபன் தயாராயாச்சு . . .
 அனந்தன் காடும் தயாராயாச்சு . . .
நானும் கிளம்பிவிட்டேன் . . .
 
வா. . . ஓடோடி வா . . .
 
 
இரவு 8 30 மணிக்கு
வேட்டைக்கு வந்துவிடு . . .


உனக்காக
ஸ்ரீ பத்மநாபனும், ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
கூடவே பாகவதர்களும்,
அடியேனும் காத்திருக்கிறோம் . . .



Read more...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

வா . . . கற்போம் !

ராதேக்ருஷ்ணா


நிழலின் அருமை,
வெயிலில் தெரியும் !


வெயிலின் அருமை,
குளிரில் தெரியும் !


நீரின் அருமை,
தாகத்தில் தெரியும் !


வெளிச்சத்தின் அருமை
இருட்டில் தெரியும் !


ஆரோக்கியத்தின் அருமை
நோயில் தெரியும் !


உணவின் அருமை
பசியில் தெரியும் !


இளமையின் அருமை
முதுமையில் தெரியும் !


நேற்றின் அருமை
நாளை தெரியும் !


அன்பின் அருமை
பிரிவில் தெரியும் !


பெற்றோரின் அருமை
இழப்பில் தெரியும் !


பணத்தின் அருமை
ஏழ்மையில் தெரியும் !


மழையின் அருமை
பஞ்சத்தில் தெரியும் !


வாழ்வின் அருமை
மரணத்தில் தெரியும் !


சுத்தத்தின் அருமை
அசுத்தத்தில் தெரியும் !


மெய்யின் அருமை
பொய்யில் தெரியும் !


தைரியத்தின் அருமை
பயத்தில் தெரியும் !


கிராமத்தின் அருமை
நகரத்தில் தெரியும் !


அன்பின் அருமை
தவிப்பில் தெரியும் !


அமைதியின் அருமை
சத்தத்தில் தெரியும் !
தேசத்தின் அருமை
வெளிநாட்டில் தெரியும் !


கடவுளின் அருமை
கஷ்டத்தில் தெரியும் !


குருவின் அருமை
குழப்பத்தில் தெரியும் !


நாமஜபத்தின் அருமை
சிரமத்தில் தெரியும் !

சத்சங்கத்தின் அருமை
சம்சாரத்தில் தெரியும் !

கோயிலின் அருமை
அழுகையில் தெரியும் !

இதுபோல் பல விஷயங்கள்
விதவிதமாய்
அருமையாய் தெரியும் ! ! !

உலகைக் கொஞ்சம் பார் . . .
உள்ளபடி பார் . . .
ஒழுங்காகப் பார் . . .

உனக்கு அறிவுரை
சொல்வதாக உலகைப் பார் .  .  .

இன்னும் நீயும், நானும்
கற்றுக்கொள்ள வேண்டியது
நிறையவே உள்ளது . . .

உலகம் ஒரு சர்வகலாசாலை . . .
 அது நாளும் நமக்கு
புதியதாய் ஒன்றை
சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும் . . .

வா . . .
மீண்டும் கற்க ஆரம்பிப்போம் . . .
வா . . .
வாழ்வை கற்போம் . . .
வா . . .
நம்மைக் கற்போம் . . .
வா . . .
புதியதாய் கற்போம் . . .
வா . . .
குழந்தையாய் கற்போம் . . .

வா . . .
நாளும் கற்போம் . . .

வா. . . .
வாழ்நாள் முழுவதும் கற்போம் . . .


Read more...

சனி, 2 நவம்பர், 2013

நிறைவான தீபாவளி ! ! !

ராதேக்ருஷ்ணா


தீபாவளி . . .
 
 
 


ராமனும் வனவாசம் முடிந்து
அயோத்யா மீண்டு வந்த தீபாவளி !


பூதேவியின் புதல்வன் நரகனுக்கும்
க்ருஷ்ணனை அளித்த தீபாவளி !


16100 ராஜகுமாரிகளுக்கு க்ருஷ்ணன்
மணாளனாக முடிவான தீபாவளி !


அதிதிக்கும் குண்டலங்கள்
மீண்டும் கிடைத்த தீபாவளி !


வருணனுக்கும் அவனது குடை
திரும்பிக் கிடைத்த தீபாவளி !


கங்கை எல்லோருடைய வீட்டையும்
ஆனந்தமாய் அடையும் தீபாவளி !
 
 
தேவலோகத்து பாரிஜாதமும்
பூலோகத்தை அடைந்த தீபாவளி !
 
 
பகவான் தன்வந்திரியும் அமிர்தத்தோடு
திருப்பாற்கடலில் வெளிப்பட்ட தீபாவளி !
 
 
லக்ஷ்மி தேவியும் ஆனந்தமாய்
நம்மை ஆசீர்வாதம் செய்யும் தீபாவளி !
 
 
இத்தனை மஹிமை உண்டு
நாம் கொண்டாடும் தீபாவளிக்கு ! ! !
 
 
குழந்தைகளுக்கு பட்டாசு
தரும் தீபாவளி !
 
பெரியவர்களுக்கு சந்தோஷம்
தரும் தீபாவளி !
 
இளசுகளுக்கு புத்தாடை
தரும் தீபாவளி !
 
உலகிற்கு வெளிச்சம்
தரும் தீபாவளி !
 
புதுமண தம்பதியருக்கு
தலையாய சுகம் தரும் தீபாவளி !
 
பகவானும் புத்தாடை
உடுத்தும் தீபாவளி !
 
சன்னியாசிகளும் பட்டாசு
வெடிக்கும் தீபாவளி !
 
இந்து தர்மத்தின் பெருமையை
உலகிற்கு பறைசாற்றும் தீபாவளி !

உன்னையும் என்னையும் நம்மையும்
இணைக்கும் தீபாவளி !


இந்த தீபாவளி வியாதியஸ்தர்களுக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி ஏழைகளுக்கு
ஐஸ்வர்ய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி நாஸ்தீகர்களுக்கு
ஆஸ்தீக தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி செல்வந்தருக்கு
இரக்க தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி முதியவருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி இளசுகளுக்கு
பொறுப்பான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி குழந்தைகளுக்கு
நிதான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி புத்தி ஸ்வாதீனமற்றவருக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி மாற்றுத் திறனாளிகளுக்கு
பலமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி தம்பதியருக்கு
சமரசமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி குடும்பத்திற்கு
ஆசிர்வாத தீபாவளியாகட்டும் !
 

இந்த தீபாவளி பெற்றோருக்கு
நிம்மதியான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பெண்களுக்கு
மகிழ்ச்சி தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி ஆதரவற்றோருக்கு
அருளான தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி பொய்யர்களுக்கு
மெய் தரும் தீபாவளியாகட்டும் !


இந்த தீபாவளி மதமாற்றம் செய்வொருக்கு
மன மாற்ற தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி உழைப்பாளிகளுக்கு
உயர்வான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி வியாபாரிகளுக்கு
லாபமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி இந்துக்களுக்கு
ஒற்றுமை தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பக்தர்களுக்கு
தரிசன தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி பாரதத்திற்கு
ஏற்றமான தீபாவளியாகட்டும் !
 
 
இந்த தீபாவளி உலகிற்கு
அமைதியான தீபாவளியாகட்டும் !


ராதேக்ருஷ்ணா...
மொத்தத்தில் இந்த தீபாவளி
எல்லோருக்கும்
நிறைந்த தீபாவளியாகட்டும் . . . .


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP