ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 அக்டோபர், 2013

அந்த நாளும் வந்திடாதோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


ப்ருந்தாவனம் . . .






நடப்பது நன்மைக்கே . . . .
ஆம்....
ப்ருந்தாவனத்தில் காலாற நடப்பது நன்மைக்கே ! ! !


வாழ்வில் எதற்கெல்லாமோ,
எங்கெல்லாமோ நடக்கின்றோம் ! ! !


யார்யாருடனோ அர்த்தமில்லாமல்
சுற்றிக்கொண்டிருக்கிறோம் ! ! !

பல கோடி ஜன்மா நாமும்
பல உடல்களில் சுற்றிச் சுற்றி
பிறந்துகொண்டேயிருக்கிறோம் ! ! !

இனி ஒரு ஜன்மா உத்தமமான
ஜன்மாவாக அமையவேண்டுமென்றால்
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் ! ! !
ப்ருந்தாவனத்தில் சுற்றுவோம் ! ! !

ப்ருந்தாவனத்தில் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
என்ன கிடைக்கும் ! ? !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தி கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ப்ரேமை கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அகம்பாவம் அழியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
தற்பெருமை ஒழிந்து போகும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பக்தியின் தன்மை புரியும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பூர்வ ஜன்ம கர்ம வினை அகலும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ஆன்ம பலம் கூடும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நாம ஜபம் விருத்தியாகும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பொறாமை, காமம், பயம் நீங்கும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனதில் தெளிவு பிறக்கும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவத ரஹஸ்யம் புரியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
மனித வாழ்வின் மஹத்துவம் தெரியும் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
யசோதையின் தனித்துவம் புரியும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
நந்தகோபரின் வாத்சல்யம் விளங்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபர்களின் தோழமை புலப்படும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கோபிகைகளின் விரஹ தாபம் தஹிக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
எல்லாம் க்ருஷ்ண லீலா என்று தோன்றும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகாவின் ப்ரேம பலம் கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
கண்களில் தானாய் கண்ணீர் வரும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
உடலெல்லாம் மயிர் கூச்சல் உண்டாகும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ண பைத்தியம் பிடிக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
பாகவதர்களின் தரிசனம் கிடைக்கும் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
ராதிகா ராணி ஆசிர்வதிப்பாள் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
அஷ்ட சகிகள் கொண்டாடுவார்கள் ! ! !

ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
க்ருஷ்ணனே நம்மைத் தழுவுவான் ! ! !
 
ப்ருந்தாவனத்தைச் சுற்றினால்
இன்னும் என்னவெல்லாமோ கிடைக்கும் ! ! !

வா . . . சுற்றுவோம் . . .
ப்ருந்தாவனத்தைச் சுற்றுவோம் . . .

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர்
ப்ருந்தாவனத்தை வலம் வருகிறார்கள்,,,
தெரியுமா ? ! ?

என்றாவது ஒரு நாள்
ஸ்ரீ ப்ருந்தாவன மாதா
தனக்கு ராதையையும், க்ருஷ்ணனையும்
காட்டிக்கொடுப்பாள் என்று நம்பி,
எத்தனை பேர் தினமும் விடியற்காலையில்
நாம ஜபத்தோடு சுற்றுகின்றனர் தெரியுமா . . .

அவர்களை ரஹஸ்யமாய்
கண்ணனும், ராதிகாவும்
கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் . . .

அவர்களை அஷ்டசகிகளும்,
உத்தவரும் ரஹஸ்யமாய்
ஆசிர்வதிக்கின்றனர் . . .

ப்ருந்தாவனத்தைச் சுற்றுபவரின்
வம்சமே பரம பாவனமானது . . .

ப்ருந்தாவனம் தொண்டர் அடிப் பொடியால்
 நிறைந்த உன்னத ப்ரதேசம் .  .  .

அதனால் தான் கண்ணனும்
தினமும் த்வாரகாவில்
ப்ருந்தாவனத்தின் தூசியை
பூஜை செய்துகொண்டிருக்கிறான் . . .

ஹே ப்ருந்தாவன மாதா .  .  .
உன்னை வலம் செய்தே
க்ருஷ்ண சைதன்யர் சமாதானமானார் ! ! !

ஹே ப்ருந்தாவன மாதா .  . .
உன்னை வலம் வந்தே
மீரா மாதா கண்ணனை அடைந்தாள்  ! ! !

ஹே ப்ருந்தாவன மாதா....
ராதையும் கண்ணனும்
உன்னையே தினமும் வலம்
வந்து சந்தோஷமாய் இருக்கின்றனர் ! ! !

இனி நான் எங்கு சுற்ற ? ? ?

உன்னைச் சுற்றுகிறேன் . . .
நீ கண்ணனும் ராதையும்
என்னோடு வரும்படி செய் . . .
 
ஹே ப்ருந்தாவனமே . . .
உன்னிடம் சரண் அடைந்தேன் . . .
 
உன் திருமடியில் எனக்கும்
ஒரு வாழ்க்கைத் தா . . .
 
ஜனனம், ஜீவிதம், மரணம்
எல்லாம் ப்ருந்தாவனத்தில்
என்று எனக்கு வாய்க்கும் ? ? ?
 
ஐயோ தெரியவில்லையே . . .
 
காலை விழித்தவுடன்
ப்ருந்தாவனத்தைச் சுற்றி,
வலம் வந்த களைப்பு தீர
யமுனையில் நீராடி,
பின் பாங்கேபிஹாரியை
தரிசனம் செய்து,
நிம்மதியாய் நாம ஜபத்தோடு
ஆடிப் பாடி மகிழ்ந்து,
க்ருஷ்ண ப்ரசாதத்தை
மட்டுமே சாப்பிட்டு,
பக்தர்களோடு அளவளாவிக்கொண்டு,
இரவில் ரஹஸ்யமாய்
கண்ணனை அனுபவித்து,...
 
இப்படியே வாழும் வாழ்க்கை
என்று எனக்கு வாய்க்கும் ?  ?  ?
 
அந்த நாளும் வந்திடாதோ ? ? ?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP