ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வந்திருக்கிறேன் அம்மா . . .

ராதேக்ருஷ்ணா


வந்திருக்கிறேன் அம்மா . . .


லலிதா அம்மா . . . 
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


விசாகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


துங்கவித்யா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


இந்துலேகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


ரங்கதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சுதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சித்ரா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சம்பகவல்லி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


என்னவென்று சொல்வேன் அஷ்ட மாதாக்களே . . .
அடியாளுக்கு நவ வித பக்தியைத் தாருங்கள் . . .

இந்த தாசிக்கு நீங்கள்
ஆசைப்படும்படி ஒரு பக்தி
வந்தால் போதும் . . .

இந்த ப்ருந்தாவனத்தில் ஏதோ
ஒரு மூளையில் இவளை
பைத்தியமாய் அலையவிடுங்கள் . . .


எனக்கு ஒன்றும் தெரியாது . . .


உங்களின் திருவடிகளில்
சரணாகதி செய்கின்றேன் . . .


இந்த கோபாலவல்லியை
உங்கள் தலைவி ராதிகாராணியிடம்
சேர்ப்பித்துவிடுங்கள் . . .


அவளுக்கு அந்தரங்கம்
கைங்கர்யம் செய்துகொண்டு,
அப்படியே இருந்தால் போதும் . . .


உலகில் ராதிகா மட்டுமே சத்தியம் . . .
ராதா ப்ரேமை மட்டுமே நித்தியம் . . .

ராதிகாவுக்கு கைங்கர்யம் செய்வதே பாக்கியம் . . .

உங்கள் திருநாமங்களை
விடாமல் ஜபிக்கிறேன் . . .

லலிதா, விசாகா, துங்கவித்யா, இந்துலேகா,
ரங்கதேவி, சுதேவி, சித்ரா, சம்பகவல்லி . . .


என்னை ராதிகாவிடம் ஒப்படையுங்கள் . . .

தயவு செய்து என்னை உங்களின்
திருவடி தூளியாய் வைத்துக்கொள்ளுங்கள் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP