ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இது தான் சுகம் ! ! !

 ராதேக்ருஷ்ணா



மனதிலே இப்படி நினைப்பாய்  ! ! !


முதலில் உன்னை
சிறு குழந்தையாக பாவிப்பாய் ! ! !


பிறகு இப்படி நினைப்பாய் ! ! !


க்ருஷ்ணா ! 
 இந்த குழந்தைக்கு
நல்லபுத்தியைக் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
சமாதானம் கொடுப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
பலம் தருவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
அழுகையை மாற்றுவாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல எண்ணங்களைத் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
சமத்தாக மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
முரட்டு சுபாவத்தை மாற்று ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
நல்ல ஆரோக்கியத்தை அருள் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் இஷ்டப்படி வைப்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் அன்பைக் கொடு ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தைக்கு
உன் தரிசனம் தா ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
கெட்ட விஷயங்களிலிருந்து மீட்பாய் ! ! !


க்ருஷ்ணா !
இந்த குழந்தையின்
கோபத்தை இல்லாமல் செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
நன்றாக சிந்திக்க வைப்பாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தையை
உன் அருகிலேயே வைத்துக்கொள்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா !
இந்த குழந்தை
எப்பொழுதும் உன் நாமத்தையே
ஜெபிக்கும்படி செய்வாய் ! ! !
 
 
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
க்ருஷ்ணா ! ! !
 
நீயே இந்த குழந்தைக்கு எல்லாம்  ! ! !
 
 
நீ தான் இந்த குழந்தையை
நல்லபடியாக காக்கவேண்டும் ! ! !
 
 
உன்னால் முடியும் க்ருஷ்ணா ! ! !
 
 
இங்கு இவ்வளவு நேரம்
நான் சொன்ன குழந்தை நீ தான் ! ! !
 
இப்படியே நினைப்பாய் ! ! !
 
 
உன்னை நீயே
கிருஷ்ணனுக்கு தத்துக் கொடுக்கிறாய் ! ! !
 
இது தான் சுகம் ! ! !
 
 
செய்து கொண்டே வா ! ! !
நினைத்துக்கொண்டே இரு ! ! !
 
 
நீ க்ருஷ்ண சொத்து
என்பதை உணர்வாய் ! ! !
 
 இந்த பாவம் தான்
பக்தியின் எல்லை நிலை ! ! !
 
 
நீயும் குழந்தை ! ! !
நானும் குழந்தை ! ! !
நாம் எல்லோரும் குழந்தை ! ! !
 
இப்படித்தான் க்ருஷ்ணன்
நம்மைப் பார்க்கிறான் ! ! !
 
புரிந்து கொள் ! ! !
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP