ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜனவரி, 2013

அதுபோலே . . .

ராதேக்ருஷ்ணா



விதைகள் பூமியில்
புதைவதால் தோற்ப்பதில்லை !


விழுதுகள் கீழ் நோக்கி
வளருவதால் அழிவதில்லை !


வேர்கள் யாருக்கும் தெரியாமல்
இருப்பதால் வீழ்வதில்லை !


எல்லோரும் நினைக்காததால்
புவி ஈர்ப்பு விசை குறைவதில்லை !


 சூரியனின் கிரணங்கள் சாக்கடையில்
விழுவதால் மாசுபடுவதில்லை !


தங்கம் ஆபரணமாக மாற
அடிபடுவதால் மதிப்பிழப்பதில்லை !


பிச்சைக்காரனின் தட்டில் விழுவதால்
காசுக்கு ஒன்றும் அவமரியாதை இல்லை !


தேய்ந்து போவதால் நிலவை
யாரும் ரசிக்காமலில்லை !


அளவில் சிறியதாயினும் கொசுவிடம்
யாரும் பயப்படாமலில்லை !


அதுபோலே . . .


உனது தோல்விகள் உன்னை
அழிப்பதில்லை !


உனது பிரச்சனைகள் உன்னை
தடுப்பதில்லை !


உனது கஷ்டங்கள் உன் வாழ்வை
தீர்மானிப்பதில்லை !


 விழுவதும், பின் எழுவதும்
வாழ்வின் கட்டாயங்கள் !


தோற்பதும், பின் வெல்வதும்
வாழ்வின் யதார்த்தங்கள் !


தவறுவதும், பின் திருந்துவதும்
வாழ்வின் ரஹஸ்யங்கள் !


வாழ்...வாழ்...வாழ்...


முடியும் வரை வாழ் . . .
வாழ்க்கை முடியும் வரை வாழ் . . .
உடல் முடியும் வரை வாழ் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP