ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 டிசம்பர், 2012

வையத்து வாழ்வீர்காள் !

ராதேக்ருஷ்ணா



வையத்து வாழ்வீர்காள் !



நாராயணனே நமக்கே எல்லாம் தருவான் !


அதற்கு நாம் ...


பாற்கடலுள் பையத் துயின்ற
பரமனடி பாடுவோம் !


ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர் பாடுவோம் !


தாயைக் குடல் விளக்கம்
செய்த தாமோதரனை
வாயினால் பாடுவோம் !


உள்ளத்துக் கொண்டு ஹரி
என்று உரக்கப் பாடுவோம் !


நாராயணன் மூர்த்தி கேசவனை
சுகமாய் பாடுவோம் !


தேவாதி தேவனை, கோயிலில் சென்று
நாம் சேவித்துப் பாடுவோம் !

 மாமாயன் மாதவன் வைகுந்தன்
என்றென்று நாமம் பலவும் பாடுவோம் !


நாற்றத் துழாய் முடி நாராயணனை
நாம் போற்றிப் பாடுவோம் !


சுற்றத்து தோழிமார் எல்லோரும்
முகில் வண்ணன் பேர் பாடுவோம் !


தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடுவோம் !


புள்ளின் வாய் கீண்டானை,
  பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானின்
கீர்த்தியைப் பாடுவோம் !


சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடுவோம் !


வல்லானைக் கொன்றானை, மாற்றாரை
மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடுவோம் !

மாயன் மணிவண்ணன் 
நென்னலே வாய் நேர்ந்தான்,
தூயோமாய் சென்று துயிலெழப் பாடுவோம் !


நந்தகோபனும்,யசோதையும்,பலதேவனும்,
நம் காதாலன் கண்ணனும் துயிலெழப் பாடுவோம் !

பல்கால் குயிலினங்கள் கூவ,
பந்தார் விரலியின் மைத்துனன் பேர் பாடுவோம் !

கொத்தலர் பூங்குழல் நப்பின்னையையும்,
அவள் மணாளனையும் பாடுவோம் !

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனையும்,
நப்பின்னை நங்கை திருவையும் பாடுவோம் !

 ஊற்றம் உடையானை,பெரியானை
அடி பணிந்து போற்றி யாம் பாடுவோம் !


செங்கண்ணன் அங்கண் இரண்டும்
கொண்டு நோக்கும்படி பாடுவோம் !


சீரிய சிங்கன் சீரிய சிங்காசனத்தில்
இருக்க நாம் காரியமாய்ப் பாடுவோம் !

என்றென்றும் கண்ணன் சேவகம் கிடைக்க
இன்று நாம் உருகிப் பாடுவோம் !

நெடுமாலின் திருத்தக்க செல்வமும்,
சேவகமும் அடையப் பாடுவோம் !

மாலே மணிவண்ணா ஆலினிலையாய்
என்று அருளப் பாடுவோம் !

 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனோடு
கூடியிருந்துக் குளிரப் பாடுவோம் !


குறையொன்றுமில்லாத கோவிந்தனை,
அறியாத பிள்ளைகளாய் அன்பினால் பாடுவோம் !


சிற்றஞ்சிறுகாலே சென்று சேவித்து,
மற்றை நம் காமம் மாற்றப் பாடுவோம் !

பட்டர் பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
எங்கும் திருவருள் பெற்று
இன்புறப் பாடுவோம் !

மார்கழித் திங்கள் மதி நிறைந்த
நன்னாளாகப் இப்பொழுதே பாடுவோம் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP