ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 டிசம்பர், 2012

வாழத்தான் வேண்டும் !

ராதேக்ருஷ்ணா



எது வரினும் அஞ்சாதே !

எது வரினும் கலங்காதே !

எது வரினும் புலம்பாதே !

எது வரினும் தளராதே !

 
 

எது வரினும் நிதானமாய் இரு !

எது வரினும் தைரியமாய் இரு !

எது வரினும் பலமாய் இரு !

எது வரினும் தெளிவாய் இரு !
 
எது வரினும் திடமாய் இரு !




எது நடப்பினும் நாம ஜபம் செய் !

எது நடப்பினும் பக்தி செய் !



எது நேரினும் நன்மையே !
 
 எது நேரினும் கடவுளின் இச்சையே !
 
 
எது வரினும், எது நடப்பினும், எது நேரினும்
நீ வாழத்தான் வேண்டும் !


நீ வாழத்தான் வேண்டும் !
நான் வாழத்தான் வேண்டும் !
நாம் வாழ்ந்தாக வேண்டும் !


வாழ்க்கை தருவதை தரட்டும் !
உலகம் தருவதை தரட்டும் !


கிருஷ்ணன் இருக்கிறான் . . .
உன்னைக் காப்பாற்ற !
என்னைக் காப்பாற்ற !
நம்மைக் காப்பாற்ற !


வா . . . உலகைப் பார்ப்போம் !
வா . . . வாழ்வைப் பார்ப்போம் !


வா . . . உலகில் வாழ்ந்து பார்ப்போம் !
வா . . . வாழ்வில் கிருஷ்ணனைப் பார்ப்போம் !


வா . . . கிருஷ்ணனில் உலகைப் பார்ப்போம் !
வா . . . கிருஷ்ணனில் வாழ்வைப் பார்ப்போம் !


வா . . . புதியதாய் பார்ப்போம் !
வா . . . சரியாய் பார்ப்போம் !
வா . . . குழந்தையாய் பார்ப்போம் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP