ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 செப்டம்பர், 2012

காலை வணக்கம் !

ராதேக்ருஷ்ணா
 விடியல் !


இளம் காலை நேரம் !
இன்றைய காலை வணக்கம் !


கிளிகள் பாடும் பூபாளம் !
" கண்ணன் வருவான்...தன்னைத் தருவான் "


காகங்கள் சொல்லும் அறிவுரை !
" ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் "


புறாக்கள் சொல்லும் ஜோசியம் !
" இந்த நாளே சிறந்த நாள் "


சிட்டுக்குருவிகளின் பிறந்த நாள் வாழ்த்து !
" ஆஹா ! விடியலே நீ வாழ்க "


மைனாக்கள் சொல்லும் ராசிபலன் !
" உன்னோட ராசி நல்ல ராசி "


கருடன் சொல்லும் ஆனந்த ரஹஸ்யம் !
" க்ருஷ்ணனைச் சுமந்து கொண்டிரு "


ஆகாயம் செய்யும் ஆசிர்வாதம் !
" நிச்சயம் விடியல் என்றுமுண்டு "


பூமித்தாய் தரும் தாய் பால் !
" விழித்திடு, எழுந்திடு, உயர்ந்திடு, வாழ்ந்திடு "


காற்று சொல்லும் மந்திரம் !
" பாரபட்சமில்லாமல் பழகு "


சூரியன் சொல்லும் தினப் பலன் !
 " இரை தேடுவதோடு இறையும் தேடு "


மலர்கள் சொல்லும் அழகுக் குறிப்பு !
" எல்லோரையும் நேசி "


மரங்கள் சொல்லும் ஆரோக்கிய வாழ்வு !
" இருக்குமிடத்தில் வாழக் கற்பாய் "


மிருகங்கள் சொல்லும் பிறந்த நாள் பலன் !
"முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் "


குழந்தைகள் சொல்லும் வெற்றிப் பாதை !
" புன்னகையால் பூமியை வசப்படுத்து "


நாட்காட்டி சொல்லும் சிறப்பு விருந்தினர் !
" இன்று வந்தார், இவரே சிறந்தவர் "


நேரம் சொல்லும் எண் கணிதம் !
" ஒவ்வொரு நொடியையும் முயற்சியால் கூட்டு "


குரு சொல்லும் பெயர் பலன் !
" க்ருஷ்ணா என்றால் நன்மை வரும் "


இதுவே இன்றைய காலை வணக்கம் !
மீண்டும் நாளை உங்களை சந்திப்போம் !


அதுவரை உங்களிடமிருந்து
பிரியா விடை பெறுவது . . .
" உங்கள் க்ருஷ்ணனும், க்ருஷ்ண தாசனும் !


இந்த நாள் சிறக்க வாழ்த்துக்கள் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP