ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கிள்ளுக்கீரையல்ல !

ராதேக்ருஷ்ணா
 
 
 
நாம ஜபம் செய்யாமல்
ஒரு நாளும் இருக்கவேண்டாம் !
 
 
சத்குருவை வாழ்வில்
என்றும் மறக்கவேண்டாம் !
 
 
க்ருஷ்ணனை நினையாமல்
பொழுது போகவேண்டாம் !
 
 
சத்சங்கத்தை ஒரு நாளும்
தவிர்க்கவேண்டாம் !
 
 
யாரையும் தவறாக
ஒரு போதும் பேசவேண்டாம் !
 
 
இந்து மதத்தை இழிவாய்
சொல்வரோடு இணங்க வேண்டாம் !
 
 
 நம் தெய்வங்களை பழிப்பவரோடு
என்றும் பழக வேண்டாம் !


பாகவத அபசாரம் செய்பவரை
மனதாலும் நினைக்க வேண்டாம் !
 
 
உடல் ஆரோக்கியத்தை
ஒரு நிமிஷம் கூட இழக்க வேண்டாம் !
 
 
அதர்மம் செய்பவரைக் கண்டு
மறந்தும் அஞ்ச வேண்டாம் !


சத்தியத்தைப் பேசுவதற்கு
எங்கும் தயங்க வேண்டாம் !


பக்தியை எப்பொழுதும்
எதற்காகவும் விடவேண்டாம் !


யாருக்காகவும் சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கவேண்டாம் !


மனதிலே பலவீனத்தை
ஒரு சமயத்திலும் வளர்க்கவேண்டாம் !


இல்லாதவரை ஒரு நாளும்
ஏளனம் செய்யவேண்டாம் !


அக்கிரமம் செய்பவர்களுக்கு
ஒரு நாளும் அடங்கவேண்டாம் !


இப்படியும் உன்னால் வாழமுடியும் !
நீ ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல !

உன்னால் வாழ முடியும் !

உன் இயல்பை சரி செய் !
உன் மதிப்பை உயர்த்து !
உன் க்ருஷ்ணனை அனுபவி !

உன் உலகில் நீ சுகமாய் இரு !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP