ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஆகஸ்ட், 2012

வரமா அல்லது சாபமா ? ? ?

ராதேக்ருஷ்ணா


வியாதிகள் . . .
வரமா அல்லது சாபமா ? ? ?

 உடலை நேசிப்பவருக்கு
வியாதி ஒரு சாபமே . . .

ஏனெனில் ;
முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் !
பிறகு ஆசையை அடக்கவேண்டும் !

இவையிரண்டும் உடல் மேல் ஆசை
உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !

ஆனால் பகவானையும்,
பக்தியையும் நேசிப்பவருக்கு
வியாதி ஒரு ஆசிர்வாதம் !

ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு
பக்கவாதம் என்னும் வியாதியே
அவரை நாராயணீயம் எழுத வைத்தது !


வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின்
தரிசனத்தை பெற்றுத் தந்தது !


ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின்
வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும்,
க்ருஷ்ண லீலா தரங்கினியையும் தந்தது !


ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின்
உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின்
பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது !


பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில்
தைத்த அம்புகளின் வலியே அவரை
சஹஸ்ர நாமத்தை சொல்ல வைத்தது !



மாறனேரி நம்பிக்கு ராஜ பிளவை நோயே
அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும்
மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது !



இப்படி பல மஹாத்மாக்களின்
வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய
மாற்றத்தையும், பக்குவத்தையும்
கொண்டுவந்திருக்கிறது . . .



நீ வியாதிகளை வரவேற்க வேண்டாம் !
ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிரு !


இதுவே நான் சொல்லும் விஷயம் !


நீ வியாதியால் வாடும் வெறும் உடலல்ல !
நீ வியாதியே இல்லாத சுத்தமான ஆத்மா !


வியாதிகள் உன் வாழ்வை தீர்மானிப்பதில்லை !
பக்தியே உன் வாழ்வை நிர்ணயிக்கிறது !


உடலை கவனித்துக்கொள் !
வியாதி வராமல் காத்துக்கொள் !
வியாதி வந்தால் சரி செய்து கொள் !


வியாதிக்காக மனமுடைந்து போகாதே !
வியாதியில் வாழ்வை வெறுக்காதே !


வியாதியை வெல்ல முயற்சி செய் !


வியாதியில்லாமல் நீ வாழ
என்றும் என் வாழ்த்துக்கள் . . .


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
இது சத்தியமான ஒரு வாக்கு . . .
இதை என்றும் மறவாதே . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP