ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

குருவாயூரப்பன் . . .

ராதேக்ருஷ்ணா

அப்பனிடம் வந்துவிட்டேன் !
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

வசுதேவரின் குலதெய்வமான
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

நாராயண சரஸில் ருத்ரகீதம் கேட்கும்
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

சிவபெருமானும் ஆனந்தமாய் அனுபவிக்கும்
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

 
க்ருஷ்ணனும் ஆராதனை செய்த
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

குருவும்,வாயுவும் ப்ரதிஷ்டை செய்த
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !

கேரள தேசத்தின் பால க்ருஷ்ணனான
குருவாயூரப்பனிடம் வந்துவிட்டேன் !



இவனை ஏன் அப்பன் என்கிறார்கள் ?
இவனோ சிறு பிள்ளை அல்லவா ! ! !

இவன் ரக்ஷிக்கும்போது அப்பன் . . .
இவன் விளையாடும்போது குட்டன் . . .
 என்றுமே இவன் லீலாப்ரியன் . . .

என்றுமே இவன் உன்னிக்ருஷ்ணன் . . .
என்றுமே இவன் பக்தவத்சலன் . . .
என்றுமே இவன் என் பிள்ளை . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP