ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 ஜூலை, 2012

நீயே ஜெயிப்பாய் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
 விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு !
 
 
தோற்றால் புலம்பாதே . . .
போராடு !
 
 
கிண்டலடித்தால் கலங்காதே . . .
 மன்னித்துவிடு !
 
 
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !


நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !


ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !


நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !
 
 
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !


உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !
 
 
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !


மொத்தத்தில் நீ பலமாவாய் . . .
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
 
 
உன்னால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
 
 
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
 உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .


 நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .


நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .


நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .


நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP