ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஜூலை, 2012

கடைசி இரவாய் . . .

 ராதேக்ருஷ்ணா


அற்புத இரவு !
சுகமாய் தூங்கப்போகிறேன் !



புரீ க்ஷேத்திரத்தில்
பலராமனின் கையைப் பிடித்துக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !



சுபத்ரா தேவியின்
 தாலாட்டைக் கேட்டுக்கொண்டே
சுகமாய் தூங்கப்போகிறேன் !



அன்னதான பிரபு ஜகன்னாதனின்
மடியில் படுத்து
சுகமாய் தூங்கப்போகிறேன் !



ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின்
திருவடியைக் கட்டிக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !



ஸ்ரீ ஹரி தாஸ் யவனின்
மிருதுவான சிரிப்பை ரசித்துக்கொண்டு 
 சுகமாய் தூங்கப்போகிறேன் !



ஸ்ரீ ஜயதேவரின் அஷ்டபதியை 
கனவில் புலம்பிக்கொண்டு
சுகமாய் தூங்கப்போகிறேன் !



நீலாசலமான புரீ க்ஷேத்திரத்தில்
 சலனமில்லாமல் சமத்தாய்
சுகமாய் தூங்கப்போகிறேன் !


இதுவே நான் தூங்கும்
கடைசி  இரவாய் இருக்கக்கூடாதா ? ! ?  


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP