ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூன், 2012

ஒரு இடம் தருவீரா . . .

ராதேக்ருஷ்ணா



திருப்பாணரே . . .
கார்த்திகையின் ரோஹிணி பெற்ற
உத்தம நல் முத்தே . . .



காவேரியின் மடியில்,
உறையூரில் உதித்த
உன்னத மாணிக்கமே . . .



உடலால் ஒதுங்கியிருந்தாலும்,
உள்ளத்தால் ரங்கனோடு
இணைந்திருந்த அற்புதமே . . .



பணிவினாலும்,பக்தியினாலும்
பூலோக வைகுந்த ராணி
ஸ்ரீரங்கநாயகிக்கு ப்ரிய புத்ரனானவரே . . .



வீணையை மீட்டி, பக்தியைப் பாடி,
தேவாதிதேவன் ரங்கநாதனை
வசப்படுத்தின ஆழ்வாரே . . .



 தீண்டத்தகாதவர் என்று உலகோர் ஒதுக்க,
ஸ்ரீரங்கனோ என் பாணன் என்று உரைக்க,
ஸ்ரீரங்கத்தில் நுழைந்த அடியவரே . . .



கல் எடுத்து அடித்த ப்ராம்மணரான
லோக சாரங்க முனிவரையே வாஹனமாக்கி
ஸ்ரீரங்கம் வந்த முனிவாஹனரே . . .



அமலனை,ஆதிபிரானை,விமலனை,
விண்ணவர் கோனை,நிமலனை,
தன்னுள் அடக்கிய வீரரே . . .



கண்ணுள் ரங்கனின் பாதத்தையும்,
சிந்தையுள் ரங்கனின் செவ்வாயையும்,
சித்தத்தில் ரங்கனின் திருக்கண்களையும்,
ரங்கனுக்குள் தன்னையும் வைத்த பாணரே !



எனக்கும் ரங்கனின் திருமேனியில்
ஒரு இடம் தருவீரா . . .

நானும் உம்மோடு பக்தி செய்ய
ஒரு இடம் தருவீரா . . .

அடியேனும் உம்மோடு வசிக்க
ஒரு இடம் தருவீரா . . .

காத்திருக்கிறேன் . . .
திருப்பாணரின் பாததூளி கோபாலவல்லி !





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP