ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஜூன், 2012

ரத யாத்திரை . . .

ராதேக்ருஷ்ணா
 
 
ஜகந்நாதா . . .
சமத்தாக ரதத்தில் உட்கார்ந்து
இருக்கவேண்டும் . . .
புரிந்ததா . . .
 
 
பலராமா . . .
ஜாக்கிரதையாக ஜகந்நாதனை
பார்த்துக்கொள்ளவேண்டும் . . .
தெரிந்ததா . . .
 
 
சுபத்ரா . . .
ஜகந்நாதன்,பலராமன் கைகளை
விடாமலிருக்கவேண்டும் . . .
விளங்கியதா . . .
 
 
மூவரும் சமத்தாக சென்று
அழகாக திரும்பவேண்டும் . . .
சரியா . . .
 
 
ஜனங்களின் மனம் குளிர
ஆடிப் பாடி மகிழவேண்டும் . . .
தெரிந்ததா . . .
 
 
சீக்கிரம் போய்விட்டு,
சீக்கிரம் வரவேண்டும் . . .
சரியா . . .
 
 
அம்மா உங்களுக்காக
நிறைய பக்ஷணங்கள் செய்து
காத்திருப்பேன் . . .
 
 
நீங்கள் வந்தவுடன் பசிக்கும் . . .
நிறைய தருவேன் . . .
 
 
ரதத்தில் போகிற வழியில்
சாப்பிடவும் நிறைய திண்பண்டங்கள்
வைத்திருக்கிறேன்  . . .
நல்லா சாப்பிடனும் . . .
 
 
ஜோரா விளையாடனும் . . .
சமத்தா திரும்பனும் . . .
 
 
அப்பதான் அம்மா ராத்திரிக்கு
உங்கள் மூன்று பேருக்கும்
நிறைய கதைகள் சொல்லுவேன் . . .
 தாலாட்டு பாடுவேன் . . .
 
 
ஜகந்நாதா . . .
வழியில் க்ருஷ்ண சைதன்யரைப்
பார்த்தால் நான் கேட்டதாகச் சொல் . . .
 
 
பலராமா . . .
வழியில் நித்தியான மஹாப்ரபுவைப்
பார்க்கும்போது நான் கட்டாயம் அவனை வரச்சொன்னதாகச் சொல் !
 
 சரி . . . சரி . . . கிளம்புங்கள் !
பக்தர்கள் காத்திருக்கிறார்கள் . . .


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP