ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 மே, 2012

எங்கள் குலதெய்வம் . . .

ராதேக்ருஷ்ணா


இந்த ராத்திரி விசேஷ ராத்திரி . . .

இபபொழுது திருக்குருகூர் ஆதிநாதர்
ஆழ்வார் திருநகரியில்
திருக்குருகூர் நம்பியோடு
திவ்யமாய் திருவீதி உலாப் போகிறார் . . .

இந்த சமயத்தில்
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான்
ஆழ்வார் திருநகரியில்
ஸ்வாமி நம்மாழ்வாரோடு
உவந்த உள்ளத்தனாய் உலாப் போகிறார் . . .

இந்த நடுநிசியில்
வரகுணமங்கை விஜயாசனர்
ஆழ்வார் திருநகரியில்
வேதம் தமிழ் செய்த பிரானோடு
திருவீதி உலாப் போகிறார் . . .

இந்த உன்னத இரவில்
திருப்புளியங்குடி பூமிபாலர்
ஆழ்வார் திருநகரியில்
காரி மாறன் சுகப்பட
ரக்ஷகனாய் உலாப் போகிறார் . . .

இந்த இருளடைந்த நள்ளிரவில்
திருத்தொலைவில்லிமங்களம்
அரவிந்த லோசனரும், தேவர்பிரானும்,
ஆழ்வார் திருநகரியில்
வகுளாபரணனோடு
வாத்சல்ய உலாப் போகிறார் . . .

இந்த வைகாசி வசந்த ராத்திரியில்
திருக்குளந்தை மாயக்கூத்தன்
ஆழ்வார் திருநகரியில்
சீர் சடகோபனோடு
மாயக் கூத்தாடிப் போகிறார் . . .

இந்த சுகம் தரும் ப்ரேம ராத்திரியில்
தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதர்
ஆழ்வார் திருநகரியில்
பராங்குச நாயகியோடு
காதல் உலாப் போகிறார் . . .

இந்த தென்றல் வீசும் ராத்திரியில்
திருக்கோளூர் வைத்தமநிதி
ஆழ்வார் திருநகரியில்
குருகை பிரானோடு
குதூகலமாய் உலாப் போகிறார் . . .

தாமிரபரணியும் அலையாட,
தொண்டர்களும் தொழுதாட,
திவ்ய ப்ரபந்தமும் திரண்டாட ,
வேதமும் தன்னை மறந்தாட,
 சந்திரனும்  சுகமாய் சதிராட,
திருப்புளியாழ்வாரும் திளைத்தாட,
மதுரகவியும் மதுரமாயாட,
கோபாலவல்லியும் அழுதாட,

வகுளாபரணன்,காரிமாறன்,
எங்கள் நம்மாழ்வார்
திருநகரியை வைகுந்தமாக்கி
பவிஷ்யதாசார்யன் ராமானுஜனும்
கை கூப்பி கும்பிட்டு ஆட
கலிபுருஷனும் கலங்கியாட,
திருவீதி உலாப் போகிறார் . . .

ஒன்பது கருட சேவை
அனுபவிக்கும் மனிதரே
எங்கள் குலதெய்வம் . . .
 



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP