ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 மே, 2012

நரசிம்மம் வரும் !

ராதேக்ருஷ்ணா
 
 
 ப்ரஹ்லாதா . . .
உனது வீரம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் த்யானம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் பக்தி வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் நாமஜபம் வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் நம்பிக்கை வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் பணிவு வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
உன் சிரத்தை வாழ்க !

ப்ரஹ்லாதா . . .
எப்படி கண்டுபிடித்தாய் ?
நரசிம்மன் தூணில் இருந்ததை ? ! ?

ப்ரஹ்லாதா . . .
எப்படி தீர்மானம் செய்தாய் ?
நரசிம்மன் நாராயணன் என்பதை ? ! ?

ப்ரஹ்லாதா . . .
என்ன நினைத்தாய் ?
நரசிம்மன் உன் தகப்பனை கொன்ற போது ? ! ?

ப்ரஹ்லாதா . . .
என்ன தைரியத்தில் நரசிம்மரின்
அருகில் ஆனந்தமாய சென்றாய் ? ! ?

ஓ ப்ரஹ்லாதா . . .
சத்தியமாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர யாராலும்
நரசிம்மரை உள்ளபடி அறியமுடியாது !

ஓ ப்ரஹ்லாதா . . .
உறுதியாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர எவராலும்
நரசிங்கத்தை இப்படி  ரசிக்கமுடியாது !
 
ஓ ப்ரஹ்லாதா . . .
இறுதியாய் சொல்கிறேன் . . .
உன்னைத் தவிர யாருக்கும்
நரசிம்மரை பூரணமாய் அனுபவிக்கமுடியாது !
 
ஆகவே ப்ரஹ்லாதரே . . .
உமது நரசிம்மத்தை
அடியேன் அனுபவிக்க
ஆசிர்வாதம் செய்வீர் . . .
 
நரசிம்மத்தின் செல்லமே . . .
உம் நரசிங்கத்தை
அடியேன் மனதில்
நிரந்தரமாய் தங்கச் சொல்லும் . . .
 
நரசிம்மப் ப்ரியனே . . .
உன் அழகிய சிங்கரை
உம்மை ஆசிர்வதித்த கை கொண்டு
என்னை ஆசிர்வதிக்கச் சொல்லும் !

நரசிம்ம ஜயந்தியில்
நான் சரணடைவது
நரசிம்ம பக்தனான
ப்ரஹ்லாத ஆழ்வாரிடத்தில் . . .

நிச்சயம் என்னைத் தேடி
நரசிம்மம் வரும் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP