ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பாரதி . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 பாரதி . . .

ப்ராம்மண வீரன் . . .

தேசக் காதலன் . . .

ஜாதிப் புரட்சிக்காரன் . . .

க்ருஷ்ணனின் தாசன் . . .

காளியின் வேலைக்காரன் . . .

தமிழ் சேவகன் . . .
 
வறுமையிலும் வீரன் . . .
 
பணத்திற்கு விலை கொடுக்காதவன் . . .
 
விடுதலை விரும்பி . . .
 
நல்ல ரசிகன் . . .
 
உத்தமக் கவிஞன் . . .
 
சமுதாய சீர்திருத்தவாதி . . .
 
மஹாகவி . . .
 
ஆனால் எங்கள் சுயநல
ஜனங்களால் ஒதுக்கப்பட்டவன் . . .
 
வறுமையில் மஹாகவியை
அழவைத்த கேடுகெட்ட சமுதாயமே;
நீ கெடுவாய் . . .
 
நல்ல வேளை . . .
எங்கள் தமிழ் கவியின்
கஷ்டத்தை உணர்ந்தது ஒரு யானையே . . .
 
ஆமாம் . . .
பார்த்தசாரதியின் யானைக்கு
மட்டுமே முண்டாசுக் கவிஞனின்
மானமும்,மனமும்,கனவும் புரிந்தது . . .
 
அதனால் இனியும் பாரதி
இங்கிருந்தால் இந்த உலகம்
அவனை அழித்துவிடும் என்று
தானே பழியைச் சுமந்தது . . .
 
மஹாகவியை உணர்ச்சியால்
வேகமாய் ஆசிர்வதித்தது . . .
 
மோக்ஷம் அடைந்தான் அந்த
மரணத்தை வென்றவன் . . .
 
இன்றும் எங்கள் நெஞ்சில்
நீங்கா இடம் பெற்றான் . . .
 
பார்த்தாசாரதியின் யானையே
நீயே என் பாரதியை இந்த
உலகத்தாரிடமிருந்துக் காத்தாய் . . .
 
பாரதி . . .
நீ வாழ்ந்தாய் . . .
நீ வாழ்கின்றாய் . . .
நீ வாழ்வாய் . . .
 
 
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP