ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஏன் வாழவேண்டும் ? ? ?

ராதேக்ருஷ்ணா


ஏன் வாழவேண்டும் . . .


எத்தனை கவலைகள் !
இதோடு ஏன் வாழவேண்டும் ?


எத்தனை பிரச்சனைகள் !
இவைகளோடு ஏன் வாழவேண்டும் ?


எத்தனை அவமானங்கள் !
இதோடு ஏன் வாழவேண்டும் ?

எவ்வளவு வலிகள் மனதிற்குள் !
 அதோடு இங்கே வாழவேண்டுமா ?




ஒவ்வொரு நாளும் போராட்டம் !
அவசியம் வாழத்தான் வேண்டுமா ?




வாழ்ந்து என்ன பிரயோஜனம் ? ! ?




வாழ்வதால் என்ன லாபம் ? ! ?




வாழ்க்கையே பாரம் . . .


போதுமே இந்த வாழ்க்கை . . .

மரணம் வராதா . . .
உடனே வராதா . . .
எனக்கு விடுதலை தராதா ?


ஐயோ . . .என்னால் முடியவில்லை !



கதறினேன் . . .கதறுகின்றேன் !


நிராதரவாய் நிற்கிறேன் . . .
புரியாமல் வாழ்கின்றேன் . . .
விடியலைத் தேடுகிறேன் . . .

அழுது அழுது
கண்கள் களைத்தன . . .

யோசித்து யோசித்து
மூளை அயர்ந்தது . . .

புலம்பி புலம்பி
என் மனம் சோர்ந்தது . . .


ஒன்றும் புரியாமல்
பிரமை பிடித்தால் போல்
இருந்தேன் . . .

யார் எனக்கு
சமாதானம் சொல்லியும்
ஒரு பிரயோஜனமுமில்லை . . .


அப்படியே இருந்தேன் . . .

திடீரென்று மனதில் ஒரு
சமாதானம் . . .

இனம் புரியாத ஒரு
தைரியம் . . .

வாழவேண்டும் என்று
ஒரு வைராக்கியம் . . .

வாழ்ந்துதான் பார்ப்போமே
என்று ஒரு எண்ணம் . . .


வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


இப்படித்தான் நாம் எல்லோரும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . . .


இறந்தால் தேவலை என்று
நாம் ஆசைப்பட்ட போதெல்லாம்
நம்மை ஏதோ ஒன்று தடுத்ததே . . .




நாம் வாழவேண்டும் என்று
உள்ளில் இருந்து ஒன்று சொல்கின்றதே !




அதுதான் க்ருஷ்ணன் . . .
அதுதான் உனக்கும் எனக்கும்
அவன் சொல்லும் பகவத் கீதை . . .


அதுவே நம்மை வாழவைக்கிறது  . . .
அவனே நம்மை வாழவைக்கிறான் . . .


வாழவைக்கும் . . . வாழவைப்பான் . . .


மரணம் நம்மைத் தேடி
வரும் வரை வாழ்வோம் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP