இவர்கள் எனக்குண்டு !
ராதேக்ருஷ்ணா
குழந்தை . . .
குழந்தையாய் இருக்கிறேன் . . .
குழந்தையின் தேவைகளை
பெற்றோர் கவனிப்பர் . . .
என் தேவைகளை
ராதையும் க்ருஷ்ணனும் கவனிக்கிறார்கள் . . .
குழந்தையின் மலமூத்திரத்தை
அம்மா சுத்தம் செய்கிறாள். . .
என் மனதின் அழுக்குகளை
ராதிகா ராணி சுத்தம் செய்கிறாள் !
குழந்தையின் சுகத்தை
பெற்றோர் யோசிக்கிறார்கள் !
என் சுகத்தை ராதிகாவும் கண்ணனும்
யோசிக்கிறார்கள் !
குழந்தைக்கு நல்லதையும் கெடுதலையும்
பெற்றோர் சொல்லித்தருகின்றனர் !
எனக்கு நல்லதையும் கெட்டதையும்
க்ருஷ்ணனும் ராதேயும்
சொல்லித்தருகின்றனர் !
குழந்தையின் அழுகுரலுக்கு
பெற்றோர் செவி சாய்கின்றனர் !
என் அழுகைக்கு ராதையும்
கண்ணனும் ஓடிவருகின்றனர் !
குழந்தையின் எதிர்காலத்தை
பெற்றோர் முடிவு செய்கின்றனர் !
என்னுடைய எதிர்காலத்தை
க்ருஷ்ணனும் ராதாமாதாவும்
முடிவு செய்திருக்கிறார்கள் !
இப்படி குழந்தையைப் போல்
என்னை ராதாமாதாவும்,
க்ருஷ்ண பிதாவும் தாங்கும்போது
நான் குழந்தையாய் இருக்கவே
என்றும் ஆசைப்படுகிறேன் . . .
எது நடந்தாலும் இவர்கள் எனக்குண்டு !
இது போதும் . . .
இந்த வாழ்வில் நான் வெல்ல . . .
இது போதும் . . .
இந்த உலகில் நான் வாழ . . .
இது போதும் . . .
நான் குழந்தையாய் குதூகலமாய்
என்றும் சிரித்திருக்க . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக