ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 ஏப்ரல், 2012

உன்னோடு பேச !

ராதேக்ருஷ்ணா
 
 
யாரையும் எடுத்தெறிந்து பேசாதே . . .
 
யாரையும் அவமரியாதையாய் பேசாதே . . .
 
யாரையும் கிண்டலாய் பேசாதே . . .
 
யாரையும் நோகடித்துப் பேசாதே . . .
 
யாரையும் அசிங்கமாய் பேசாதே . . .
 
யாரும் அழும்படி பேசாதே . . .
 
யாரும் நொந்துபோகும்படி பேசாதே . . .
 
யாரும் வெறுக்கும்படி பேசாதே . . .
 
யாரையும் வெறுப்பேத்திப் பேசாதே . . .
 
யாரையும் தப்பாய் பேசாதே . . .
 
ஏனெனில் எல்லோருக்கும்
க்ருஷ்ணன் இருக்கிறான்  . . .
 
நீ இதையெல்லாம் செய்தால்
பின்னாளில் உன்னோடு பேச
ஒருவரும் இருக்கமாட்டார்கள் . . .
 
நீ எதையெல்லாம் இன்று
பேசினாயோ நிச்சயம் அவையெல்லாம்
உனக்கே வந்து சேரும் . . .
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எப்பொழுதும் நல்லதையே பேசவேண்டும் !
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எல்லோரிடமும் அன்பாய் பேசவேண்டும் !
 
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ என்றும் வினயத்தோடு பேசவேண்டும் !
 
க்ருஷ்ணன் பேச வேண்டுமா ? ! ?
 
இனி உன் பேச்சை மாற்றினால்
உன் க்ருஷ்ணன் உன்னோடு பேசுவான் !
 
 
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP