உன்னோடு பேச !
ராதேக்ருஷ்ணா
யாரையும் எடுத்தெறிந்து பேசாதே . . .
யாரையும் அவமரியாதையாய் பேசாதே . . .
யாரையும் கிண்டலாய் பேசாதே . . .
யாரையும் நோகடித்துப் பேசாதே . . .
யாரையும் அசிங்கமாய் பேசாதே . . .
யாரும் அழும்படி பேசாதே . . .
யாரும் நொந்துபோகும்படி பேசாதே . . .
யாரும் வெறுக்கும்படி பேசாதே . . .
யாரையும் வெறுப்பேத்திப் பேசாதே . . .
யாரையும் தப்பாய் பேசாதே . . .
ஏனெனில் எல்லோருக்கும்
க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
நீ இதையெல்லாம் செய்தால்
பின்னாளில் உன்னோடு பேச
ஒருவரும் இருக்கமாட்டார்கள் . . .
நீ எதையெல்லாம் இன்று
பேசினாயோ நிச்சயம் அவையெல்லாம்
உனக்கே வந்து சேரும் . . .
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எப்பொழுதும் நல்லதையே பேசவேண்டும் !
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ எல்லோரிடமும் அன்பாய் பேசவேண்டும் !
உன்னோடு க்ருஷ்ணன் பேசவேண்டுமென்றால்
நீ என்றும் வினயத்தோடு பேசவேண்டும் !
க்ருஷ்ணன் பேச வேண்டுமா ? ! ?
இனி உன் பேச்சை மாற்றினால்
உன் க்ருஷ்ணன் உன்னோடு பேசுவான் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக