ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

எப்பொழுது கிளம்பட்டும் ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா . . .
இந்த உலகை விட்டுச் செல்ல
நான் தயார் . . .

நான் இங்கே
புரிந்து கொண்டது இவ்வளவு தான் !


மனிதர்கள் மாறுவார்கள் . . .
நீ என்றும் மாறுவதில்லை . . .


பணம் வரும் போகும் . . .
உன் கருணை என்னை விட்டு
ஒரு நாளும் விலகுவதில்லை . . .


ஆரோக்கியம் கூடும் . . .குறையும் . . .
உன் அன்பு ஒரு நாளும்
குறைவதேயில்லை . . .


பந்துக்கள் வருவார்கள் . . .போவார்கள் . . .
நீ என்னை விட்டு நீங்குவதில்லை . . .


சரீரம் நிரந்தரமல்ல . . .
ஆத்மா அழியாதது . . .
மனம் மாறக்கூடியது . . .
பக்தி காப்பாற்றும் . . .
நாம ஜபம் சத்தியம் . . .
சரணாகதி உயர்ந்தது . . .

இவை எல்லாம்
உன் அருளால் புரிந்தது . . .

அதனால் இந்த உலகை
விட்டு வர நான் தயார் . . .

நான் எப்பொழுது கிளம்பவேண்டும்
என்று நீ தான் முடிவு செய்யவேண்டும் . . .

கிளம்பும் வரை நான்
உன்னை நினைத்து வாழ்வேன் . . .

நான் எப்பொழுது கிளம்பட்டும் ?

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP